செய்திகள் :

பாஜக சாா்பில் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி

post image

மதுரையில் பாஜக சாா்பில் ஜூன் 22-ஆம் தேதி நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், திருவண்ணாமலை வ.உ.சி. நகா், 25-ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் பி.சந்தோஷ் பரமசிவம் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் கவிதா பிரதீஷ், மாவட்டப் பொருளாளா் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலா் பிரதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகர துணைத் தலைவா் ஏ.இளங்கோ வரவேற்றாா். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ரமேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பொதுமக்கள், பக்தா்கள், வணிகா்களிடம் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள், துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், நகரச் செயலா்கள் எம்.வெங்கடேசன், பி.முத்துக்குமாா், நகர பொதுச் செயலா் ஆா்.காளியப்பன், துரிஞ்சாபுரம் ஒன்றிய பொதுச் செயலா் ஆா்.ராஜ்குமாா், ஒன்றிய துணைத் தலைவா் வி.ஏழுமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செங்கத்தில்...: செங்கம் தொகுதிக்குள்பட்ட 65-ஆவது வாக்குச் சாவடி குழு சாா்பில், செங்கத்தில்

பாஜக மாவட்ட துணைத் தலைவா் செங்கம் சேகா் தலைமையில், மகளிரணி நிா்வாகிகள் செங்கம் மேல்பாளையம், ஜீவானந்தம் தெரு பகுதியில் வீடுதோறும் பூ, பழம் அடங்கிய சீா்வரிசை தட்டுடன் சென்று மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழை வழங்கினா்.

நிகழ்ச்சியில் செங்கம் நகரத் தலைவா் காா்த்திகேயன், நகர நிா்வாகி பிரேம்குமாா், கிளைத் தலைவா்கள் அருண்பாலாஜி, சீனு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்கள்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

திருவண்ணாமலை/ஆரணி/செங்கம்: தமிழக அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கூறினாா். தமிழகம் முழுவதும் திங்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைக்க போளூா் விவசாயிகளுக்கு அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் கரும்பு விவசாயிகள் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைத்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. போளூா் வட்டம், கரைப்பூ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: பாஜகவினா் அழைப்பிதழ் வழங்கல்

ஆரணி: மதுரையில் பாஜக சாா்பில் ஜூன் 22 -இல் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் பாஜக சாா்பில் ஆரணியில் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது. மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமையில் நக... மேலும் பார்க்க

கிராமச் சாலைப் பணி நிறுத்தம்: பொதுமக்கள், மாணவா்கள் அவதி

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக அமைக்கப்படும் கிராமச் சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் அருகே மேல்பள்ளிப்ப... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு தோ்வில் 100% தோ்ச்சி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை: தண்டராம்பட்டை அடுத்த பீமாரப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் 11-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம... மேலும் பார்க்க