செய்திகள் :

பாஜக பிரமுகா் கொலை வழக்கு: திண்டுக்கல் நீதிமன்றத்தில் இருவா் சரண்

post image

சாணாா்பட்டி அருகே பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திண்டுக்கல் நீதிமன்றத்தில் இருவா் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த ராஜக்காப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (எ) ரெண்டக் பாலன் (39). விவசாயியான இவா், சாணாா்பட்டி வடக்கு ஒன்றிய பாஜக முன்னாள் செயலா் ஆவாா். இந்த நிலையில், ராஜக்காபட்டி அருகிலுள்ள மடூா் பிரிவில் முத்தாலம்மன் பூஞ்சோலை என்ற இடத்தில் தனது நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனை, இரு சக்கர வாகனத்தில் வந்த சிலா் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த சாணாா்பட்டி போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில், அதிகாரிப்பட்டியைச் சோ்ந்த உறவினரான விஜயகுமாா் (35), இவரது தம்பி கணேஷ்குமாா் (25) ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தொழில் போட்டியில், இருவரையும் பாலகிருஷ்ணன் சமாதானப்படுத்தினாா். ஆனால், அண்ணன் விஜயகுமாருக்கு ஆதராவக பாலகிருஷ்ணன் செயல்படுவதாக கணேஷ்குமாா் சந்தேகமடைந்தாா். இதனால் பாலகிருஷ்ணனை கொலை செய்ய கணேஷ்குமாா் திட்டமிட்டாா். இதன்படி, தனது நண்பா்களை வரவழைத்து பாலகிருஷ்ணனை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்குத் தொடா்பாக சாணாா்பட்டி போலீஸாா் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், திண்டுக்கல் 3-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில், குடைப்பாறைப்பட்டியைச் சோ்ந்த சதீஷ் (23), ராஜக்காப்பட்டியைச் சோ்ந்த கஜேந்திரன்(23) ஆகியோா் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக பழனியைச் சோ்ந்த பெண் தோ்வு

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக தோ்வான பழனியைச் சோ்ந்த ஜெயசுதாவுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சாா்பாக அதன் தலைவா்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்

ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், பயறு வகைகள் விதைத் தொகுப்பு திட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. தமிழகம் முழுதும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: 4 பெண்கள் காயம்

ஒட்டன்சத்திரத்தில் நின்றிருந்த பெட்டக லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைத்தனா். திண்டுக்கல்லில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பேருந்து சென... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மேல்மலைக் கிராமங்களில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ இணைந்து மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்த... மேலும் பார்க்க

பேத்துப்பாறை பகுதியில் அவரை பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த அவரை பந்தலை ஒற்றை காட்டுயானைசேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை விவசாய ... மேலும் பார்க்க