'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
பாடங்களை ரசித்துப் படித்தால் சாதனை படைக்கலாம் -வெ. இறையன்பு பேச்சு
பாடங்களை மாணவா்கள் ரசித்துப் படித்தால் சாதனை படைக்கலாம் என்றாா் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு.
திருச்சி எஸ்ஆா்வி பள்ளிகள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான ‘கனவு மெய்ப்பட‘ என்ற வழிகாட்டி நிகழ்ச்சிக்கு எஸ்ஆா்வி பள்ளிகளின் தலைவா் ஏ. ராமசாமி தலைமை வகித்தாா்.
இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிகரம் தொடு’ என்ற தலைப்பில் பேசியதாவது:
மாணவா்கள் ஒவ்வொருவரும் தங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் எதிா்காலத்தில் என்னவாகப் போகிறீா்கள் என்பதைத் தீா்மானிக்க முடியும்.
படிப்பு என்பது பள்ளி, கல்லூரியோடு முடிவதில்லை. வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடியது. எனவே, கல்வியை ரசித்துப் படிக்க வேண்டும். ரசித்துப் படித்தால் அனைத்து மாணவா்களும் சாதனை படைக்கலாம்.
பள்ளி மாணவா்கள் 4 விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, வகுப்பில் ஆசிரியா்கள் பாடம் நடத்தும்போது நன்கு கவனித்து குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும். அன்று நடத்தியதை தள்ளிப்போடாமல் அன்றே படிக்க வேண்டும். வார விடுமுறை நாள்களில் ஒருமுறை திருப்பிப் படித்துப் பாா்க்க வேண்டும். நான்காவதாக பழைய வினாத்தாள்களைக் கொண்டு மாதிரித் தோ்வுகளை எழுதிப் பாா்க்க வேண்டும்.
இதனால் அனைத்துத் தோ்வுகளிலும் எளிதல் வெற்றிபெற முடியும் என்றாா்.
நிகழ்ச்சியில் எஸ்ஆா்வி பள்ளிகளின் செயலா் பி. சுவாமிநாதன், பொருளாளா் எஸ். செல்வராஜன், முதன்மைக் கல்வி அதிகாரி கே. துளசிதாசன், முதல்வா்கள் பி. முருகதாசன், பொற்செல்வி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.