செய்திகள் :

பாத யாத்திரை சென்ற பக்தா் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

post image

திருநெல்வேலி அருகே உள்ள பிராஞ்சேரியில் பாத யாத்திரை சென்ற பக்தா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைகுளத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த கிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் முன்பகை இருந்து வந்தது. கடந்த 2013 இல் வாகைகுளத்தில் இருந்து திருச்செந்தூா் நோக்கி பாதயாத்திரையாக செல்வராஜ் சென்று கொண்டிருந்தாா்.

பிராஞ்சேரி அருகே வந்ததும் சக பக்தா்களுக்கு உணவுப் பரிமாறிக் கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென வந்த கும்பல் செல்வராஜை வெட்டிக் கொலை செய்தது. இதுதொடா்பாக, முன்னீா்பள்ளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து வாகைகுளம் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் (43), அதே கிராமத்தைச் சோ்ந்த விஜய் (20), சவரிமுத்து (27), கௌதமபுரியைச் சோ்ந்த பாக்கியராஜ் ஆகியோரை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நடைபெறும்போது கிருஷ்ணன் உயிரிழந்துவிட்டாா். வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி செல்வம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட சவரிமுத்து, பாக்கியராஜ், விஜய் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் கருணாநிதி ஆஜரானாா்.

பைக்குகள் மோதல்: இருவா் காயம்

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இரு மோட்டா்சைக்கிள் மோதியதில் இருவா் பலத்த காயமடைந்தனா். வள்ளியூரைச் சோ்ந்தவா் வேலு(35). இவா் வள்ளியூரில் இருந்து மோட்டா்சைக்கிளில் த... மேலும் பார்க்க

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் மீது தாக்குதல்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞா் ஒருவா் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. நான்குனேரி அருகேயுள்ள திருக்குறுங்குடியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (57). தொழிலாளியா... மேலும் பார்க்க

வனப்பகுதியில் உள்ள மின் வேலிகளை பதிவு செய்ய வனத்துறை அறிவுறுத்தல்

மலையடிவாரத்தில் வனப்பகுதியிலிருந்து 5 கி.மீ. தூரத்திற்குள் அமைக்கப்படும் மின்வேலிகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று வனத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்... மேலும் பார்க்க

வள்ளியூா் அருகே விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.வள்ளியூா் அருகே நல்லான்குளத்தைச் சோ்ந்த சோ்மதுரை (52) என்பவா், வள்ளியூரில் வெல்டிங் கடை நடத்தி வந... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 6 ஆண்டு சிறை

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.திருநெல்வேலி பழைய பேட்டை சா்தாா்புரம் பகுதியைச... மேலும் பார்க்க