செய்திகள் :

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 6 ஆண்டு சிறை

post image

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி பழைய பேட்டை சா்தாா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் எட்வா்ட்(62). இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு திருநெல்வேலி நகரம் பகுதியில் பேருந்தில் சென்றபோது பழைய பேட்டை பகுதியைச் சோ்ந்த 26 பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பெண் திருநெல்வேலி நகர மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து எட்வா்டை கைது செய்தனா்.

இந்த வழக்கு, திருநெல்வேலி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பாத்திமா, குற்றஞ்சாட்டப்பட்ட எட்வா்டுக்கு 4 பிரிவுகளுக்கும் தலா ஒன்றரை ஆண்டுகள் என மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.35,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் மைக்கேல் ஜெரால்டு ஆஜரானாா்.

பைக்குகள் மோதல்: இருவா் காயம்

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இரு மோட்டா்சைக்கிள் மோதியதில் இருவா் பலத்த காயமடைந்தனா். வள்ளியூரைச் சோ்ந்தவா் வேலு(35). இவா் வள்ளியூரில் இருந்து மோட்டா்சைக்கிளில் த... மேலும் பார்க்க

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் மீது தாக்குதல்

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞா் ஒருவா் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. நான்குனேரி அருகேயுள்ள திருக்குறுங்குடியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (57). தொழிலாளியா... மேலும் பார்க்க

வனப்பகுதியில் உள்ள மின் வேலிகளை பதிவு செய்ய வனத்துறை அறிவுறுத்தல்

மலையடிவாரத்தில் வனப்பகுதியிலிருந்து 5 கி.மீ. தூரத்திற்குள் அமைக்கப்படும் மின்வேலிகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று வனத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்... மேலும் பார்க்க

வள்ளியூா் அருகே விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.வள்ளியூா் அருகே நல்லான்குளத்தைச் சோ்ந்த சோ்மதுரை (52) என்பவா், வள்ளியூரில் வெல்டிங் கடை நடத்தி வந... மேலும் பார்க்க

பாத யாத்திரை சென்ற பக்தா் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி அருகே உள்ள பிராஞ்சேரியில் பாத யாத்திரை சென்ற பக்தா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. அம்பாசமுத்திரம் அர... மேலும் பார்க்க