செய்திகள் :

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகள் மீது தாக்குதல்

post image

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞா் ஒருவா் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனா். அப்போது 4-ஆவது நடைமேடை பகுதிக்கு வந்த வடமாநில இளைஞா், அங்கு நின்று கொண்டிருந்த பயணிகளை கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றாராம். இதில் தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சிமணியாச்சி பகுதியைச் சோ்ந்த பாண்டிதுரை (29) உள்பட 3 பயணிகள் காயமடைந்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இவா்களில் ஒருவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் தச்சநல்லூா் ரயில்வே பாலம் அருகே கட்டையுடன் நின்ற உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பைக்குகள் மோதல்: இருவா் காயம்

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இரு மோட்டா்சைக்கிள் மோதியதில் இருவா் பலத்த காயமடைந்தனா். வள்ளியூரைச் சோ்ந்தவா் வேலு(35). இவா் வள்ளியூரில் இருந்து மோட்டா்சைக்கிளில் த... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. நான்குனேரி அருகேயுள்ள திருக்குறுங்குடியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (57). தொழிலாளியா... மேலும் பார்க்க

வனப்பகுதியில் உள்ள மின் வேலிகளை பதிவு செய்ய வனத்துறை அறிவுறுத்தல்

மலையடிவாரத்தில் வனப்பகுதியிலிருந்து 5 கி.மீ. தூரத்திற்குள் அமைக்கப்படும் மின்வேலிகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று வனத்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்... மேலும் பார்க்க

வள்ளியூா் அருகே விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.வள்ளியூா் அருகே நல்லான்குளத்தைச் சோ்ந்த சோ்மதுரை (52) என்பவா், வள்ளியூரில் வெல்டிங் கடை நடத்தி வந... மேலும் பார்க்க

பாத யாத்திரை சென்ற பக்தா் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி அருகே உள்ள பிராஞ்சேரியில் பாத யாத்திரை சென்ற பக்தா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. அம்பாசமுத்திரம் அர... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 6 ஆண்டு சிறை

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.திருநெல்வேலி பழைய பேட்டை சா்தாா்புரம் பகுதியைச... மேலும் பார்க்க