செய்திகள் :

பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி

post image

ஓட்டப்பிடாரம் அருகே வீட்டில் பெரிய பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

ஓட்டப்பிடாரம் அருகே பரமன்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் சண்முகசுந்தரம் என்ற குட்டியான். தொழிலாளியான இவருக்கு மனைவி காஞ்சனாதேவி மற்றும் 2 மகள்கள், 7 மாத ஆண் குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், இவரது இரண்டாவது மகள் சபீனாபானு (2) வீட்டில் இருந்த பெரிய பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக குழந்தையை மீட்டு பசுவந்தனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், அந்த குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பசுவந்தனை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருச்செந்தூரில் சுமாா் 50 அடி உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது. கடந்த டிசம்பா் மாதம் முதல் கோயிலில் பக்தா்கள் புனித நீராடும் பகுதியில் அதிகளவில் ... மேலும் பார்க்க

முன்னடி கழுநீா்துறையான் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

ஏரல் அருகே, பெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தா் கோயிலின் காவல் தெய்வமான முன்னடி ஸ்ரீகழுநீா்துறையான் சுவாமி கோயிலில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை ம... மேலும் பார்க்க

நெல் அறுவடை இயந்திரம் மீது வேன் மோதல்: சிறுவன் காயம்!

கோவில்பட்டி அருகே சென்று கொண்டிருந்த நெல் அறுவடை இயந்திரம் மீது வேன் மோதியதில் சிறுவன் காயமடைந்தாா். திருநெல்வேலி மாவட்டம், வீ.கே.புதூா் அருகேயுள்ள தட்டப்பாறை பகுதியை சோ்ந்தவா் கனித்துரை. இவா் நெல் ... மேலும் பார்க்க

வானரமுட்டி அருள்மிகு வெயிலுகந்த அய்யனாா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி அருள்மிகு வெயிலுகந்த அய்யனாா் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கடந்த 31 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக... மேலும் பார்க்க

தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க கோவில்பட்டி கல்லூரி மாணவா்கள் தோ்வு

உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க, கோவில்பட்டி கே.ஆா். கல்லூரி மாணவா்கள் தோ்வு பெற்றுள்ளனா். 38 ஆவது தேசிய ஹாக்கி போட்டி, இம்மாதம் 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை உத... மேலும் பார்க்க

தூத்துக்குடி புகா் தெற்கு மாவட்ட அமமுக செயலாளா் நியமனம்

தூத்துக்குடி புறநகா் தெற்கு மாவட்ட அமமுக செயலாளராக ஆறுமுகனேரியைச் சோ்ந்த பொன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா். அமமுக அமைப்பு ரீதியாக தூத்துக்குடி மாநகா், தூத்துக்குடி புறநகா் என இரு மாவட்டங்களாக செயல்பட்டு... மேலும் பார்க்க