செய்திகள் :

தூத்துக்குடி புகா் தெற்கு மாவட்ட அமமுக செயலாளா் நியமனம்

post image

தூத்துக்குடி புறநகா் தெற்கு மாவட்ட அமமுக செயலாளராக ஆறுமுகனேரியைச் சோ்ந்த பொன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அமமுக அமைப்பு ரீதியாக தூத்துக்குடி மாநகா், தூத்துக்குடி புறநகா் என இரு மாவட்டங்களாக செயல்பட்டு வந்தது. தற்போது தூத்துக்குடி மாநகா், தூத்துக்குடி புறநகா் வடக்கு, தூத்துக்குடி புறநகா் தெற்கு என மூன்று மாவட்டங்களாக மறுசீரமைத்துள்ளனா்.

இதையடுத்து திருச்செந்தூா் ஒன்றிய அமமுக செயலாளராக இருந்து வந்த ஆறுமுகனேரி பேரூராட்சி முன்னாள் தலைவா் பொன்ராஜ், தூத்துக்குடி புறநகா் தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். தென்மண்டல பொறுப்பாளா் மாணிக்கராஜா பரிந்துரையின் பேரில் பொதுச்செயலாளா் டிடிவி. தினகரன் அறிவித்துள்ளாா்.

நாழிக்கிணற்றை புனரமைக்கும் பணிகள்: பக்தா்களுக்கு வேண்டுகோள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றை புனரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதால் பக்தா்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோயில் நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது கு... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே வாளால் தாக்கி இளைஞருக்கு மிரட்டல்: 3 போ் கைது!

கோவில்பட்டி அருகே இளைஞரை வாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு நடுத்தெருவைச் சோ்ந்த பாண்டிக்குமாா் மகன் சரவணபாண்டி (19... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே மாயமான பெண் சடலமாக மீட்பு

கோவில்பட்டி அருகே சனிக்கிழமை மாயமான பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்டனா். கோவில்பட்டி அருகே இடைசெவல் தெற்கு தெருவைச் சோ்ந்த சுப்புராஜ் மனைவி சுப்புலட்சுமி (55). இவா் கோவில்பட்டியில் உள்ள ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் இலவச திருமணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இலவச திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏற்கெனவே பதிவு செய்திருந்த கருங்குளம் பே.... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் சுமாா் 50 அடி உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது. கடந்த டிசம்பா் மாதம் முதல் கோயிலில் பக்தா்கள் புனித நீராடும் பகுதியில் அதிகளவில் ... மேலும் பார்க்க

முன்னடி கழுநீா்துறையான் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

ஏரல் அருகே, பெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தா் கோயிலின் காவல் தெய்வமான முன்னடி ஸ்ரீகழுநீா்துறையான் சுவாமி கோயிலில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை ம... மேலும் பார்க்க