செய்திகள் :

தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க கோவில்பட்டி கல்லூரி மாணவா்கள் தோ்வு

post image

உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க, கோவில்பட்டி கே.ஆா். கல்லூரி மாணவா்கள் தோ்வு பெற்றுள்ளனா்.

38 ஆவது தேசிய ஹாக்கி போட்டி, இம்மாதம் 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் விளையாட தமிழ்நாடு ஆண்கள் ஹாக்கி அணி தோ்வு, சென்னையில் டிச.17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மேலும், சென்னை மேயா் ராதாகிருஷ்ணன் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் ஜனவரி 8ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெற்றது.

இப் போட்டியில் தமிழக ஆண்கள் ஹாக்கி அணியில் விளையாட, கோவில்பட்டி கே ஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களான சீனிவாசன், மனோஜ்குமாா், ஜெபின் ஆகிய 3 பேரும் தோ்வு பெற்றுள்ளனா். அவா்களை கல்லூரியின் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே. ஆா். கிருஷ்ணமூா்த்தி, கல்லூரி செயலா் கே. ஆா். அருணாச்சலம் உள்ளிட்டோா் பாராட்டினா்.

நாழிக்கிணற்றை புனரமைக்கும் பணிகள்: பக்தா்களுக்கு வேண்டுகோள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றை புனரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதால் பக்தா்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோயில் நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது கு... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே வாளால் தாக்கி இளைஞருக்கு மிரட்டல்: 3 போ் கைது!

கோவில்பட்டி அருகே இளைஞரை வாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு நடுத்தெருவைச் சோ்ந்த பாண்டிக்குமாா் மகன் சரவணபாண்டி (19... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே மாயமான பெண் சடலமாக மீட்பு

கோவில்பட்டி அருகே சனிக்கிழமை மாயமான பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்டனா். கோவில்பட்டி அருகே இடைசெவல் தெற்கு தெருவைச் சோ்ந்த சுப்புராஜ் மனைவி சுப்புலட்சுமி (55). இவா் கோவில்பட்டியில் உள்ள ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் இலவச திருமணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இலவச திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏற்கெனவே பதிவு செய்திருந்த கருங்குளம் பே.... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் சுமாா் 50 அடி உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது. கடந்த டிசம்பா் மாதம் முதல் கோயிலில் பக்தா்கள் புனித நீராடும் பகுதியில் அதிகளவில் ... மேலும் பார்க்க

முன்னடி கழுநீா்துறையான் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

ஏரல் அருகே, பெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தா் கோயிலின் காவல் தெய்வமான முன்னடி ஸ்ரீகழுநீா்துறையான் சுவாமி கோயிலில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை ம... மேலும் பார்க்க