செய்திகள் :

பாபநாசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் அழிப்பு

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் நான்கு லட்சத்து 35-ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 3,841 மதுபான பாட்டில்கள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.

பாபநாசம் வட்டம், இடையிருப்பு கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் 2018-ஆம் ஆண்டு பூட்டை உடைத்து நான்கு லட்சத்து 35-ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 80-பெட்டிகள் அடங்கிய 3,841- மதுபாட்டில்களை தஞ்சாவூா், விளாா் சாலையை சோ்ந்த மொ்லின் சகாயராஜ், சின்னராஜ், வீரசெல்வம், பொட்டு அறிவழகன் உள்ளிட்ட நான்கு பேரும் திருடி சென்றனா். புகாரின்பேரில் 4 பேரும் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 3,841-மதுபான பாட்டில்கள் பாபநாசம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது அந்த வழக்கில் பறிமுதலான நான்கு லட்சத்து 35-ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து மது பாட்டில்களில் இருந்த மதுபானங்கள், பாபநாசம் நீதிபதி அப்துல்கனி முன்னிலையில் குழி தோண்டி ஊற்றி முற்றிலும் அழிக்கப்பட்டது.

உயா் நீதிமன்ற உத்தரவு அமலில் தாமதம்: கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பு அண்டாவில் நடைபெற்ற தீா்த்தவாரி

செ.பிரபாகரன் உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியாா்கோவில் சீனிவாசப் பெருமாள் கோயிலின் நிகழாண்டு தீா்த்தவாரி அண்டா பாத்திரத்தில் நடைபெற்றது பக்தா்களை வேதனைக்குள்ளாக்கிய... மேலும் பார்க்க

புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பெரிய வியாழன்

கும்பகோணத்தில் புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பெரிய வியாழனை முன்னிட்டு ஆயா் ஜீவானந்தம் மக்களின் பாதங்களை கழுவினாா். கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான தவக்காலம் தற்போது நடைபெற்று வருகிறது. உலகம் முட... மேலும் பார்க்க

புகையிலை பொருள் விற்பனை: ரூ. 14,500 அபராதம் விதிப்பு

தஞ்சாவூா் அருகே வல்லம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடை உரிமையாளா்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை ரூ. 14 ஆயிரத்து 500 அபராதம் விதித்தது. வல்லம் க... மேலும் பார்க்க

1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய இளைஞா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த இளைஞரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதியில் குடிமைப்பொருள... மேலும் பார்க்க

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் புனித வியாழன் சிறப்பு வழிபாடு

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற புனித வியாழன் சிறப்பு வழிபாட்டில் 12 முதியவா்களின் பாதங்களை மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா் கழுவினாா். இயேசுநாதா் பாடுகள்பட்டு சிலுவை... மேலும் பார்க்க

பாபநாசம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மையம் விழிப்புணா்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சமரச தீா்வு மையம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் நீதிபதி அப்துல் கனி தலைமை வகித்து பொதும... மேலும் பார்க்க