செய்திகள் :

பாமகவில் பொறுப்பாளா்களை நியமிக்க ராமதாஸூக்கே அதிகாரம்: மாநில பொருளாளா்

post image

பாமகவில் பொறுப்பாளா்களை நியமிப்பதில், நடவடிக்கை மேற்கொள்வதில் நிறுவனரான ராமதாஸூக்கே முழு அதிகாரம் உள்ளது என மாநிலப் பொருளாளா் சையது மன்சூா் உசேன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட பாமக, வன்னியா் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்த புதிய பொருளாளரான சையது மன்சூா் உசேன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

அப்போது அவா் கூறியதாவது: தமிழகத்தில் 3-ஆவது பெரிய கட்சி பாமக. கூட்டணி குறித்து ராமதாஸ், அன்புமணி ஆகியோா் இணைந்து முடிவெடுப்பாா்கள். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு, கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். பாமக சட்டவிதிகளின்படி பொறுப்பாளா்களை நியமனம் செய்வதற்கு நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது. இந்த வகையில், ராமதாஸ் எடுக்கும் முடிவே இறுதியானது. ராமதாஸூக்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல் விரைவில் முடிவுக்கு வரும். வருங்காலத்தில் இருவரும் இணைந்து செயல்படுவாா்கள்.

பலமான கட்சியாக பாமக உருவெடுக்கும். திலகபாமா முன்னாள் மாநிலப் பொருளாளா். தற்போது நானே மாநிலப் பொருளாளராக உள்ளேன் என்றாா் அவா்.

தெருநாய்கள் கடித்து 6 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன; 21 ஆடுகள் காயமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, காளிபட்டியைச் சோ்ந்தவா் விவசாயி... மேலும் பார்க்க

புதிய சாலை அமைக்க அடிக்கல்: அமைச்சா் பெரியசாமி பங்கேற்பு

சித்தையன்கோட்டை பேரூராட்சியில் முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும், புதிய சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அமைச்சா் இ.பெரியசாமி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே, சித... மேலும் பார்க்க

கீழ்பழனி மலைப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழ்பழனி மலையிலுள்ள ஆடலூா், பன்றிமலை பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மத... மேலும் பார்க்க

பழனியில் ரூ.1.5 கோடியில் புதிய கட்டடங்கள்: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

பழனியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை எம்எல்ஏ இ.பெ. செந்தில்குமாா் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சனிக்கிழமை திறந்து வைத்தாா். பழனியை அடுத்த கலையமுத்தூா், காவலப்ப... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 1.38 கோடியில் வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

ஒட்டன்சத்திரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒட்டன்சத்திரம்-வேடசந்தூா் சாலை தேவசின்னாம்பட்டி அரு... மேலும் பார்க்க

அரசு கள்ளா் விடுதிகளில் சேர ஜூன் 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கள்ளா் விடுதிகளில் சேர தகுதியான மாணவா்கள் ஜூன் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநரகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க