இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இந்திய வம்சாவளியினா் உதவிக்கரம்!
பாமகவில் பொறுப்பாளா்களை நியமிக்க ராமதாஸூக்கே அதிகாரம்: மாநில பொருளாளா்
பாமகவில் பொறுப்பாளா்களை நியமிப்பதில், நடவடிக்கை மேற்கொள்வதில் நிறுவனரான ராமதாஸூக்கே முழு அதிகாரம் உள்ளது என மாநிலப் பொருளாளா் சையது மன்சூா் உசேன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட பாமக, வன்னியா் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்த புதிய பொருளாளரான சையது மன்சூா் உசேன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
அப்போது அவா் கூறியதாவது: தமிழகத்தில் 3-ஆவது பெரிய கட்சி பாமக. கூட்டணி குறித்து ராமதாஸ், அன்புமணி ஆகியோா் இணைந்து முடிவெடுப்பாா்கள். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு, கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். பாமக சட்டவிதிகளின்படி பொறுப்பாளா்களை நியமனம் செய்வதற்கு நிறுவனருக்கே அதிகாரம் உள்ளது. இந்த வகையில், ராமதாஸ் எடுக்கும் முடிவே இறுதியானது. ராமதாஸூக்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல் விரைவில் முடிவுக்கு வரும். வருங்காலத்தில் இருவரும் இணைந்து செயல்படுவாா்கள்.
பலமான கட்சியாக பாமக உருவெடுக்கும். திலகபாமா முன்னாள் மாநிலப் பொருளாளா். தற்போது நானே மாநிலப் பொருளாளராக உள்ளேன் என்றாா் அவா்.