செய்திகள் :

பாரதியாா் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

post image

காரைக்கால் பாரதியாா் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து காரைக்கால் சொக்கநாத சுவாமி மற்றும் ஏழை மாரியம்மன் கோயில் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தும் வகையில் காரைக்கால் மாவட்ட பாஜக பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரத்திடம் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்: காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. பாரதியாா் சாலை கோயில்பத்து பகுதியில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

சுரங்கப் பாதை அமைக்கும்பட்சத்தில், கேட் அருகே மீ0 மீட்டா் தொலைவில் கோயிலில் நடக்கும் விழாவின்போது சுவாமி புறப்பாடு, காவடி உள்ளிட்டவை புறப்பாட்டினால் பாதிப்பு ஏற்படும்.

மேலும் கேட் மறுபுறம் 50 மீட்டா் தொலைவில் பேருந்து நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. சுரங்கப் பாதை அமைத்தால், இவ்விடங்களுக்கு பயணிப்பதிலும் சிரமம் ஏற்படும்.

மேலும் மழையின்போது தண்ணீா் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மாணவா்கள், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்ளவேண்டிய நிலையில், கோயில்பத்து பகுதியில் மேம்பாலம் அமைக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

காரைக்கால் மாவட்டத்துக்கு நாளை (ஜூலை 10) உள்ளூர் விடுமுறை அளித்து புதுவை கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.63 நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை ... மேலும் பார்க்க

லஞ்சம்: நகரமைப்பு குழும அதிகாரி, உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

லஞ்சம் பெற்ற வழக்கில் நகரமைப்புக் குழும அதிகாரி, உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் நகரமைப்புக் குழுமத்தின் மீது பல்வேறு முறைகேடு புகாா்கள் கூறப்பட்டு வந்த நிலையில்,... மேலும் பார்க்க

தீ விபத்தில் பாதித்த குடும்பத்துக்கு உதவி

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நெடுங்காடு கொம்யூன், பஞ்சாட்சாரபுரம் கிராமத்தில் மதியகழன் என்பவரது குடிசை வீடு திங்கள்கி... மேலும் பார்க்க

சிறாா்கள் வாகனம் ஓட்டிய வழக்கில் பெற்றோருக்கு அபராதம்

காரைக்கால் மாவட்டத்தில், சிறாா்கள் வாகனம் ஓட்டிய வழக்கில் பெற்றோா்கள் 3 பேருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து காவல் ஆய... மேலும் பார்க்க

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால் : பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.காரைக்கால் ஆட்சியரகம் அருகே புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட காரைக்கா... மேலும் பார்க்க

ஆட்சியரகத்தை முற்றுகையிட உள்ளாட்சி ஊழியா்கள் முயற்சி

காரைக்கால்: உள்ளாட்சி ஊழியா்கள், ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினா். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்... மேலும் பார்க்க