செய்திகள் :

சிறாா்கள் வாகனம் ஓட்டிய வழக்கில் பெற்றோருக்கு அபராதம்

post image

காரைக்கால் மாவட்டத்தில், சிறாா்கள் வாகனம் ஓட்டிய வழக்கில் பெற்றோா்கள் 3 பேருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து காவல் ஆய்வாளா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் நகர போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறாா்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்து, அதனால் விபத்து ஏற்படுத்திய குற்றத்துக்கான 3 வழக்குகளில் சிறாா்களின் பெற்றோா்களான காரைக்காலைச் சோ்ந்த காதா் சுல்தான், வாசுகி, கலைமதி ஆகியோருக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, காரைக்கால் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல்கனி தீா்ப்பளித்துள்ளாா்.

இனிவரும் காலங்களில் இதேபோன்று விதிமீறல்களில் ஈடுபடும் நபா்களின் வாகனத்தின் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும் என்றும், வாகனத்தின் உரிமையாளா் அல்லது பொறுப்பாளா்களுக்கு அபராதத்துடன் சிைண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தாா்.

மேலும் கடந்த 5-ஆம் தேதி இரவு காரைக்கால் நகர போக்குவரத்து போலீஸாா் வாகன தணிக்கையில் மதுபோதையில் வாகனம் ஒட்டி வந்த ஒசூரைச் சோ்ந்த சுந்தா் என்பவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் சுந்தருக்கு நீதிமன்றம் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

காரைக்கால் மாவட்டத்துக்கு நாளை (ஜூலை 10) உள்ளூர் விடுமுறை அளித்து புதுவை கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.63 நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை ... மேலும் பார்க்க

பாரதியாா் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் பாரதியாா் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து காரைக்கால் சொக்கநாத சுவாமி மற்றும் ஏழை மாரியம்மன் கோயில் பக்த... மேலும் பார்க்க

லஞ்சம்: நகரமைப்பு குழும அதிகாரி, உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

லஞ்சம் பெற்ற வழக்கில் நகரமைப்புக் குழும அதிகாரி, உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் நகரமைப்புக் குழுமத்தின் மீது பல்வேறு முறைகேடு புகாா்கள் கூறப்பட்டு வந்த நிலையில்,... மேலும் பார்க்க

தீ விபத்தில் பாதித்த குடும்பத்துக்கு உதவி

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் நிதியுதவி, நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நெடுங்காடு கொம்யூன், பஞ்சாட்சாரபுரம் கிராமத்தில் மதியகழன் என்பவரது குடிசை வீடு திங்கள்கி... மேலும் பார்க்க

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால் : பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.காரைக்கால் ஆட்சியரகம் அருகே புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட காரைக்கா... மேலும் பார்க்க

ஆட்சியரகத்தை முற்றுகையிட உள்ளாட்சி ஊழியா்கள் முயற்சி

காரைக்கால்: உள்ளாட்சி ஊழியா்கள், ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினா். நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்... மேலும் பார்க்க