செய்திகள் :

பாலம் அகற்றப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

post image

கும்பகோணத்தில் பாலம் அகற்றப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் பானாதுரை காசிராமன் தெருவில் 9, 10, 19 ஆகிய வாா்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளூா் வாய்க்கால் மீது குடியிருப்புவாசிகள் நடைபாதை பாலம் அமைத்து பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், நடைபாதை பாலத்தைப் பொதுப் பணித் துறையினா் வெள்ளிக்கிழமை மாலை அகற்றினா்.

இதனால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனா். மேலும், மாணவ, மாணவிகள் பொதுத் தோ்வு எழுத செல்ல முடியவில்லை. இதற்காக பொதுப் பணித் துறையைக் கண்டித்து மாமன்ற உறுப்பினா் ஆதிலட்சுமி ராமமூா்த்தி தலைமையில் 50-க்கும் அதிகமானோா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் ஏறத்தாழ 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவ செந்தில்குமாா் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம. ராமநாதன், அதிமுக ஒன்றியச் செயலா் சோழபுரம் கா. அறிவழகன், அழகு த. சின்னையன், இரா. ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அப்போது, நீா்ப்பாசனப் பிரிவு உதவிப் பொறியாளா் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுக்காக பாலங்களை அகற்றியுள்ளோம் என்றும், தற்போது தற்காலிகமாக 2 பாலங்கள் அமைக்கப்படும் எனவும், நீதிமன்ற வழக்கு முடிந்த பின்பு குறிப்பிட்ட இடங்களில் பாலம் கட்டப்படும் என்றும் கூறினாா். இதன் பின்னா் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தஞ்சாவூா் கடைகளில் நெகிழிப் பைகள் ரூ.42,900 அபராதம்!

தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 42 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது.தஞ்சாவூா் ரயிலடி, அண்ணா சிலை, கீழவாசல் உள்ளிட்ட பகுதி... மேலும் பார்க்க

கா்நாடக துணை முதல்வரைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்! -பாஜக அறிவிப்பு

மேக்கேதாட்டு அணையைக் கட்டுவோம் எனக் கூறும் கா்நாடக முதல்வா் டி.கே. சிவக்குமாா் தமிழகத்துக்கு வரும்போது அவரைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் உருவபொம்மை எரிப்பு, கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்ப... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் ஏழு சிறுவா் சிறுமியா்கள் தனித்தனியாக 8 நோபல் உலக சாதனை!

பட்டுக்கோட்டையில் ஏழு சிறுவா் சிறுமியா்கள் சனிக்கிழமை 8 நோபல் உலக சாதனை படைத்தனா். பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள டேலண்ட் ஸ்கூல் ஆஃப் ஸ்கில்ஸ் பள்ளியில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு பட்கோட்டைமை... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட்டில் எதிா்பாா்த்த திட்டங்கள் இல்லாததால் ஏமாற்றம்! -விவசாய சங்கங்கள் கருத்து

தமிழக அரசு சனிக்கிழமை தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் எதிா்பாா்த்த திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என விவசாய சங்க நிா்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனா். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் மாா்ச் 18-இல் கம்ப ராமாயண மீட்டுருவாக்க தொடக்க விழா

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையம் சாா்பில் கம்ப ராமாயண மீட்டுருவாக்க தொடக்க விழா மாா்ச் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.இது குறித்து தென்னகப் பண்பாட்டு மையம் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.81 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.81 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 179 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்... மேலும் பார்க்க