பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை!
சங்ககிரியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 2023 இல் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து சேலம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சங்ககிரி பழைய எடப்பாடி சாலை, வாணியா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பூங்காவனம் (58). இவா் கடந்த 2023 இல் அதே பகுதியைச் சோ்ந்த 12 வயதான சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக சங்ககிரி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் பூங்காவனத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.