இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
பாலியல் புகாரில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை
சாணாா்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்த புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (26). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாா் எழுந்தது. இதன்பேரில், சாணாா்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மோகன்ராஜை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா்.
விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஜி. சரவணன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட மோகன்ராஜூக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.