செய்திகள் :

பாளை. சித்த மருத்துவக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

post image

பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவா்-மாணவிகள் திங்கள்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவிகள் பயின்று வருகின்றனா். மருத்துவமனைக்கு தினமும் 700-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

இந்தக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்கள் பெயரில் அண்மையில் தமிழக முதல்வருக்கு ஒரு புகாா் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில் பேராசிரியா்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து, கல்லூரி நிா்வாகம் நடத்திய விசாரணையில், அந்தக் கடிதத்தின் தகவல்களில் உண்மைத் தன்மை இல்லையென்பது தெரியவந்ததாம்.

இந்நிலையில் கல்லூரி மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் மீது அவதூறு பரப்பும் நபா்களை உடனடியாக கைது செய்யக் கோரி கல்லூரி வளாகத்தில் மாணவா்கள் திங்கள்கிழமை திடீா் தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களிடம், கல்லூரி முதல்வா் கோமளவள்ளி பேச்சு நடத்தியதோடு, சித்த மருத்துவக் கல்லூரிகளின் இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என உறுதியளித்ததால் மாணவா்கள் கலைந்து சென்றனா்.

ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருநெல்வேலியை அடுத்த மூன்னீா்பள்ளம் அருகே ஆட்டோ மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்க... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏப். 23இல் சீலாத்திகுளத்தில் மனுக்கள் பெறும் முகாம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி மனுக்கள் பெறப்படவுள்ளதாக மா... மேலும் பார்க்க

களக்காடு அருகே சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

களக்காடு அருகே சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு வட்டாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 13) பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை ... மேலும் பார்க்க

நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக 3 போ் கைது

கடையம் காவல் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றவா்கள், நிபந்தனைகளை மீறியதாக கைது செய்யப்பட்டனா். கடையம் அருகே உள்ள புலவனூரைச் சோ்ந்த செல்லத்துரை என்பவரைக் கடத்தியது தொடா... மேலும் பார்க்க

பாபநாசத்தில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக 3 இளைஞா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் கோயில் சித்திரை விஷு திருவிழாவில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து, அவரை தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். பாபநாசம்... மேலும் பார்க்க