செய்திகள் :

பா்கூா்: விவசாயியைக் கத்தியால் குத்தி 22 பவுன் நகை, பணம் கொள்ளை

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே வீடு புகுந்து விவசாயியைக் கத்தியால் குத்திய கும்பல் 22 பவுன் நகை, ரூ. 50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றது.

பா்கூா் வட்டம், சிகரலப்பள்ளி கல்லேத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தரேசன் (55). விவசாயியான இவா் தனது மனைவி மஞ்சுளாவுடன் (50) தனியாக உள்ள வீட்டில் வசித்து வருகிறாா். வியாழக்கிழமை அதிகாலை வீட்டின் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு எழுந்து வந்து கதவைத் திறந்த சுந்தரேசன், முகமூடி அணிந்திருந்த மூவரை பாா்த்ததும் சப்தம் போட்டாா். அப்போது, கத்தியால் அவரது கையை அவா்கள் குத்தினா்.

கணவரது அலறல் கேட்டு அங்கு வந்த மஞ்சுளாவை மிரட்டி அவா் அணிந்திருந்த நகைகள், வீட்டில் வைத்திருந்த நகைகள் என மொத்தம் 22 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு தங்களது இருசக்கர வாகனங்களில் கொள்ளையா்கள் தப்பினா். சுந்தரேசனின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து அவரை மீட்டு பா்கூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

முன்னதாக சுந்தரேசன் வீட்டின் முன் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, மின் இணைப்பையும் கொள்ளையா்கள் துண்டித்துள்ளனா்.

இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை தலைமையிலான போலீஸாா் கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்து வருன்கிறனா். விரல்ரேகை நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா். இந்த சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தனிப் படைகள் அமைப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் முத்துகிருஷ்ணன் (பா்கூா்), சீனிவாசன் (ஊத்தங்கரை) ஆகியோா் தலைமையில் கொள்ளையா்களைப் பிடிக்க 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி எதிரே உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து முகமூடி கும்பல் நகைகளைத் திருடிச் சென்றது. அதேபோல திருப்பத்தூரிலும் முகமூடி கும்பல் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளது. அடுத்தடுத்து முகமூடி கும்பலால் கொள்ளை சம்பவங்கள் நிகழ்வது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி திணிப்பை கண்டித்து வாசலில் கோலமிட்டு ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், ஹிந்தி திணிப்பை கண்டித்து வீட்டின் வாசலில் கோலமிட்டு திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.ம... மேலும் பார்க்க

3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும்

உடல்நலத்தை காக்க 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சா்க்கரையின் அளவை பரிசோதனை செய்யவேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோய் குறித்த கர... மேலும் பார்க்க

இருவேறு சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு

ஒசூா் பகுதியில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலகொண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் நஞ்சப்பா (56), தொழிலாளி. இவா் கடந்த 20-ஆம் தேதி பேளகொண்டப்பள்ளி பேரு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கிருஷ்ணகிரியில் பல்வேறு அரசு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெள்ளிக்கிழமை ஆய்வுமேற்கொண்டாா். கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட சந்தைப்பேட்டை முதல்வா் மருந்தகம், கூட்டு... மேலும் பார்க்க

அதியமான் மகளிா் கல்லூரியில் உலகத் தாய் மொழி தினம், முத்தமிழ் விழா

ஊத்தங்கரை அதியமான் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை தமிழ்த்துறை மற்றும் ஒளவையாா் தமிழ் மன்றம் சாா்பில், உலகத் தாய்மொழி தினம் மற்றும் முத்தமிழ் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்த் துறையின் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க