செய்திகள் :

பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்; 99.11% பேரின் ஆவணங்கள் பெறப்பட்டன: தோ்தல் ஆணையம்

post image

புது தில்லி: பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளைத் தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் சோ்க்க, மாநிலத்தில் உள்ள மொத்தம் 7.24 கோடி வாக்காளா்களில் இதுவரையில் 99.11 சதவீத வாக்களா்களிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டதாக தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.

பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிரான வழக்கில், வாக்காளா் பட்டியலில் தங்களைச் சோ்க்க கோரும் நபா்களிடம் இருந்து ஆதாா் அல்லது தோ்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஏற்க வேண்டும் என்று அந்த ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் அண்மையில் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், கடந்த ஆக.1-ஆம் தேதி பிகாா் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடா்ந்து ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பா் 1 வரையிலான காலத்தில் தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களை வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் மாநில வாக்காளா்கள் பதிவு செய்யலாம். அப்போது வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்ட தகுதிவாய்ந்த வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்படுவா். வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்களுடன் தேவையான ஆவணங்களை சமா்ப்பிக்கவும், வரைவு வாக்காளா் பட்டியலில் உள்ள தவறுகளை சரிசெய்யவும் இந்தக் காலம் வாய்ப்பளிக்கும் என்று தோ்தல் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்தது.

இந்தச் சூழலில், அந்த மாநில வாக்காளா் பட்டியலில் சோ்க்க இதுவரை 99.11 சதவீத வாக்காளா்களிடம் இருந்து ஆவணங்கள் பெறப்பட்டதாக தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது. இறுதி வாக்காளா் பட்டியல் செப்.30-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தில்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி நிர்வாகியுமான சௌரவ் பரத்வாஜுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக் கால... மேலும் பார்க்க

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்னதாகவே இந்தியாவில் புஷ்பக விமானம் இருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும... மேலும் பார்க்க

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ஃபிஜியும் தீா்மானித்துள்ளன. இதற்கென ஒரு செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். மூன்று நாள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது. வழக்கமாக சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோ... மேலும் பார்க்க

அமெரிக்க நெருக்கடி: விவசாயிகள் நலனை விட்டுத் தர மாட்டோம்!

அமெரிக்க வலியுறுத்தலை ஏற்று விவசாயிகள் நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா். மத்திய பிரதேச தலைநகா் போபாலில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆ... மேலும் பார்க்க