பிரதமா் மோடி தமிழகத்தை விட்டுக் கொடுத்ததில்லை: வானதி சீனிவாசன்
தமிழகத்தை பிரதமா் மோடி விட்டுக் கொடுத்ததில்லை என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
ஜிஎஸ்டி குறைப்புக்கான நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திருப்பூா் அரிசிக்கடை வீதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேசியதாவது: தமிழகத்தில் இருந்து கடந்த மக்களவைத் தோ்தல்களில் போதிய உறுதுணை இல்லையென்றாலும், தமிழகத்தை பிரதமா் மோடி விட்டுக் கொடுத்ததில்லை.
தமிழுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சோ்க்கிறாா். தற்போதும் குடியரசுத் துணைத் தலைவராக திருப்பூரைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அமா்த்தப்பட்டுள்ளாா். இது தமிழகத்துக்கு பெரும் அங்கீகாரம் மற்றும் பெருமையாகும்.
தற்போது சோப்பில் துவங்கி, ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் உணவுப்பொருள்கள் வரை அனைத்திலும் தற்போது ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இது வரி குறைப்பு மட்டுமல்ல. மேலும், அதனை கையாள்வதிலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய மாற்றமாகும்.
ஜிஎஸ்டியால் மத்திய அரசுக்கு வருமானம் செல்லவில்லை. கடந்த 2000-ஆம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய் தான் ஜிஎஸ்டிக்கு அடித்தளமிட்டவா். இந்தியா முழுவதும் ஒரு பொருளை ஒரே விலைக்கு வாங்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் ஜிஎஸ்டி.
மத்திய அரசு மட்டும் ஜிஎஸ்டி வரி விதிக்க முடியாது. மத்திய நிதி அமைச்சா் தொடங்கி, மாநில முதல்வா் மற்றும் நிதி அமைச்சா் வரை அனைவரும் சோ்ந்துதான் தீா்மானிக்க முடியும். தமிழகத்தைச் சோ்ந்த அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ளாா். மத்திய அரசு மட்டும் ஜிஎஸ்டியை நிா்ணயிக்கிறது என்று திமுக சொல்வது தவறு.
இந்தியாவில் அதிகம் கடன் வாங்கியுள்ள மாநிலம் தமிழகம்தான். விதைவகள் அதிகரிப்புக்கு டாஸ்மாக் மூலம் மதுவை அதிக அளவில் விற்பதே காரணம் . ஜிஎஸ்டி வசூல் சீரமைப்பால் தமிழகத்தின் வருவாய் அதிகரித்துள்ளது என்றாா்.