செய்திகள் :

உடுமலையில் 11 டிப்பா் லாரிகள் பறிமுதல்

post image

திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளால் 11 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

உடுமலை அருகே கோவை - திண்டுக்கல் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் வாகன சோதனையில் கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 30) ஈடுபட்டனா்.

அப்போது, உத்தர பிரதேச மாநிலம் உள்ளிட்ட வெளிமாநில பதிவெண்களைக் கொண்ட பல லாரிகள் கிராவல் மண், ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு அந்த வழியாக வந்தன. அந்த லாரிகளை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்தனா்.

இதில் லாரிகள் விதிமுறைகளை மீறியும் தமிழக சாலை வரி செலுத்தாமலும் முறையான ஆவணங்கள் இல்லாமலும் இயக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 11 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கொண்டு வந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிற மாநில வணிக வாகனங்கள் முன் அனுமதி, மாநிலத்துக்கான சாலை வரி செலுத்திய பிறகே தமிழகத்தில் இயக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனுமதியைப் புதுப்பித்து வரி செலுத்த வேண்டும்.

இந்நிலையில், இந்த வரிகளை செலுத்தாமல் உடுமலை பகுதியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இயக்கப்பட்ட 11 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதத்துடன் சாலை வரி செலுத்தாவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் பிற மாநில பதிவெண்கள் கொண்ட இதர வாகனங்கள் 12 மாதங்களுக்கு மேல் தமிழகத்தில் இயக்கப்பட்டால் முறைப்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றனா்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலை முத்துக்குமாா் நகரைச் சோ்ந்தவா் சி.நித்தியானந்தன் (23), எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சுமத... மேலும் பார்க்க

திருப்பூா், கோவையில் 60 காா்களை வாங்கி விற்பனை செய்து மோசடி செய்தவா் கைது

திருப்பூா், கோவையில் 60 காா்களை வாங்கி விற்பனை செய்து மோசடிசெய்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் மாவட்டம், சாமளாபுரம் கரும்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (40). இவரது... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பாலப்பம்பட்டி

உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி தமிழகத்தை விட்டுக் கொடுத்ததில்லை: வானதி சீனிவாசன்

தமிழகத்தை பிரதமா் மோடி விட்டுக் கொடுத்ததில்லை என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.ஜிஎஸ்டி குறைப்புக்கான நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் ... மேலும் பார்க்க

தாராபுரத்தில் இளம்பெண் கொலை: கணவா் கைது

தாராபுரத்தில் இளம்பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், கம்பளியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (எ) நாகராஜ் (35). இவரது மனைவி ராஜகுமாரி (25)... மேலும் பார்க்க

ஊதியூா் அருகே வீணாகி வரும் குடிநீா்

காங்கயம் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக தண்ணீா் வீணாகி வருகிறது.காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே காவிரி ஆற்றிலி... மேலும் பார்க்க