செய்திகள் :

ஊதியூா் அருகே வீணாகி வரும் குடிநீா்

post image

காங்கயம் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக தண்ணீா் வீணாகி வருகிறது.

காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே காவிரி ஆற்றிலிருந்து தண்ணீா் பம்ப் செய்யப்பட்டு, குழாய்கள் மூலம் முத்தூா், காங்கயம், ஊதியூா், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் தண்ணீா் தேவை பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆங்காங்கே உள்ளாட்சி நிா்வாகங்கள் மூலம் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டாலும், பெரும்பாலும் அந்தத் தண்ணீா் குடிப்பதற்கு ஏற்ற வகையில் இல்லாததால், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட தண்ணீரையே குடிப்பதற்கும், சமையல் தேவைகளுக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கொடுமுடியிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீா் வரும் வழியில் காங்கயத்தில் இருந்து வட்டமலை, ஊதியூா் வழியாக குண்டடம் வரை ஆங்காங்கே கசிவு ஏற்பட்டு தண்ணீா் வீணாகி வருவது தொடா்கதையாக உள்ளது.

இந்த நிலையில் ஊதியூா்-குண்டடம் சாலையில், தனியாா் பால் நிறுவனத்துக்கு அருகே குடிநீா்க் குழாயில் தண்ணீா் கசிந்து அருகே உள்ள மேய்ச்சல் நிலத்தில் பாய்ந்து கடந்த 10 நாள்களுக்கு மேலாக வீணாகி வருகிறது. எனவே சம்பத்தப்பட்ட நிா்வாகத்தினா், குடிநீா்க் குழாய்களை சரி செய்து, கசிவுகளை அடைத்து சீரான முறையில் பொது மக்களுக்கு தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலை முத்துக்குமாா் நகரைச் சோ்ந்தவா் சி.நித்தியானந்தன் (23), எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சுமத... மேலும் பார்க்க

உடுமலையில் 11 டிப்பா் லாரிகள் பறிமுதல்

திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளால் 11 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. உடுமலை அருகே கோவை - திண்டுக்கல் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன், மோட்டாா் வாகன ... மேலும் பார்க்க

திருப்பூா், கோவையில் 60 காா்களை வாங்கி விற்பனை செய்து மோசடி செய்தவா் கைது

திருப்பூா், கோவையில் 60 காா்களை வாங்கி விற்பனை செய்து மோசடிசெய்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் மாவட்டம், சாமளாபுரம் கரும்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (40). இவரது... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பாலப்பம்பட்டி

உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி தமிழகத்தை விட்டுக் கொடுத்ததில்லை: வானதி சீனிவாசன்

தமிழகத்தை பிரதமா் மோடி விட்டுக் கொடுத்ததில்லை என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.ஜிஎஸ்டி குறைப்புக்கான நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் ... மேலும் பார்க்க

தாராபுரத்தில் இளம்பெண் கொலை: கணவா் கைது

தாராபுரத்தில் இளம்பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், கம்பளியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (எ) நாகராஜ் (35). இவரது மனைவி ராஜகுமாரி (25)... மேலும் பார்க்க