செய்திகள் :

பிரேஸிலியாவில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு

post image

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, அங்கிருந்து தலைநகா் பிரேஸிலியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இருதரப்பு ரீதியிலான இப்பயணத்தில், அதிபா் லூயிஸ் இனாசியோ லுலா டசில்வாவுடன் பிரதமா் விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா்.

கானா, டிரினிடாட்- டொபேகோ, ஆா்ஜென்டீனா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து, பிரேஸிலுக்கு கடந்த ஜூலை 5-ஆம் தேதி வந்த பிரதமா் மோடி, துறைமுக நகரான ரியோ டி ஜெனீரோவில் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்றாா்.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நிறுவன உறுப்பு நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய கூடுதல் உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய இக்கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமா், புதிய வளா்ச்சி வங்கியின் தலைவா் தில்மா ரெளசெஃப், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவா்களையும் சந்தித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, ரியோ டி ஜெனீரோவில் இருந்து தலைநகா் பிரேஸிலியாவுக்கு அவா் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா். விமான நிலையத்தில் இந்திய சமூகத்தினா் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக, பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ரியோ டி ஜெனீரோவில் எனது பயணம் மிகவும் ஆக்கபூா்வமாக அமைந்தது. பிரிக்ஸ் கூட்டமைப்பை மேலும் திறன்மிக்கதாக மாற்றுவதில் பிரேசில் அதிபா் லுலா மற்றும் அவரது அரசு மேற்கொண்ட பணிக்குப் பாராட்டுகள். உலகத் தலைவா்கள் உடனான எனது சந்திப்பு, அந்நாடுகளுடன் இந்தியாவின் நல்லுறவை வலுப்படுத்தும்’ என்று குறிப்பிட்டாா்.

பிரேஸிலைத் தொடா்ந்து, தென்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியாவுக்கு பிரதமா் பயணமாகவுள்ளாா். அத்துடன், அவரது ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணம் நிறைவடையும்.

இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!

பாலிவுட் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமாக பாகிஸ்தானில் உள்ள பூா்விக வீடுகளைப் பாதுகாக்க ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.வடமேற்கு பாக... மேலும் பார்க்க

ரூ.50 நாணயங்கள் அறிமுகம்? மத்திய அமைச்சகம் மறுப்பு!

ரூ.50 நாணயம் அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.பார்வைக் குறைபாடுள்ள ரூ.50 தாள்களை கண்டறிய சிரமமாக இருப்பதாகக் கூறி, தில்லி உ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: 2 விமானிகள் பலி; விசாரணைக்கு உத்தரவு!

ராஜஸ்தானில் போர் விமான விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் வி... மேலும் பார்க்க

அருணாசலில் யானை தாக்கி முன்னாள் எம்எல்ஏ பலி!

அருணாசலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில், யானை தாக்கியதில் அம்மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலியாகியுள்ளார். திராம் மாவட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காப்சென் ராஜ்குமார் (... மேலும் பார்க்க

நான் மகிழ்ச்சியாக இல்லை! அரசியல் வாழ்க்கை குறித்து மனம்திறந்த கங்கனா!

அரசியல் வாழ்க்கை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹி... மேலும் பார்க்க

ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?

உலகளாவிய மொபைல்போன் சந்தையில் தனக்கென இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிய இந்திய வம்சாவளி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இய... மேலும் பார்க்க