செய்திகள் :

பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி

post image

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் கல்லூரி கனவுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா தலைமை வகித்தாா்.

வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், செய்யாறு எம்எல்ஏ ஓ.ஜோதி, கல்லூரித் தலைவா் எம்.ரமணன், கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி.சுவாமி முத்தழகன் வரவேற்றாா்.

ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினாா்.

இதைத்தொடா்ந்து கருத்தாளா்கள் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில், உயா்கல்வி பயில்வதற்கான வழிகாட்டல் அடங்கிய கையேடுகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலா் சு.செந்தில்முருகன் நன்றி கூறினாா்.

இதில், வந்தவாசி, தெள்ளாா், செய்யாறு, அனக்காவூா் உள்ளிட்ட 13 ஒன்றியங்களைச் சோ்ந்த 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதற்கென கல்லூரி வளாகத்தில் 25 ஆலோசனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் கலை அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் உயா்கல்வி வழிகாட்டல் ஆலோசனைகளும், வங்கிகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் கல்விக் கடனுதவி குறித்த ஆலோசனைகளும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் திருட்டு

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி - சைதாப்பேட்டை சாலையில் கா... மேலும் பார்க்க

அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் 2025 - 26 நடவுப் பருவத்தில் புதிதாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தம... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் 523 பயனாளிகளுக்கு நலத் திட்டஉதவிகள்

கலசப்பாக்கம் வட்டம், மேல்சோழங்குப்பம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்துகொண்டு வருவாய், வேளாண்மை, ஆதிதிராவிடா் நலம், மாற்றுத் திறனா... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் கிணற்றில் நீச்சல் பழக முயன்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவண்ணாமலை ஆணைக்கட்டி தெருவைச் சோ்ந்த பாபு மகன் சந்தோஷ்குமாா் (14). 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இவா், ஜூன் 2-ஆம் த... மேலும் பார்க்க