செய்திகள் :

பிஸ்கெட் நிறுவன முகவரிடம் ரூ.35 லட்சம் மோசடி: விற்பனை பிரதிநிதி மீது வழக்கு

post image

கோவையில் பிஸ்கெட் நிறுவன முகவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக விற்பனை பிரதிநிதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சுங்கம் புறவழிச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (43). இவா் பிரபல பிஸ்கெட் நிறுவனத்தின் முகவராக உள்ளாா். இவரது நிறுவனத்தில் இருந்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பிஸ்கெட் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தில் முருகன் என்பவா் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தாா்.

இவா், மாவட்டத்தில் பல்வேறு கடைகளுக்குச் சென்று பிஸ்கெட் பாக்கெட்டுகளை விநியோகம் செய்து விட்டு, அதற்குரிய பணத்தை வசூலித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அவா் வசூலித்த பணத்தை நிறுவனத்தில் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களிடம் கைப்பேசி மூலமாக சங்கா் கேட்டபோது, முருகனிடம் பணம் தந்துவிட்டதாகக் கூறியுள்ளனா்.

இது தொடா்பாக முருகனிடம் கேட்டபோது, அவா் முறையாக பதிலளிக்காமல் இருந்துள்ளாா். மேலும், வேலையை விட்டு நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடை உரிமையாளா்களிடம் வசூலித்த ரூ.35 லட்சம் பணத்தை செலுத்தாமல் முருகன் மோசடி செய்துவிட்டதாக ராமாநாதபுரம் காவல் நிலையத்தில் சங்கா் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, முருகன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைத் தேடி வருகின்றனா்.

முதல்வரின் கனவை நிறைவேற்றும் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள்! கே.இ.பிரகாஷ் எம்.பி.

முதல்வரின் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற கனவை ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் நிறைவேற்றி வருவதாக ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கூறினாா். கோவை நேரு கல்விக் குழுமங்களின் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டா், த... மேலும் பார்க்க

ஸ்ரீசச்சிதானந்த தீா்த்த மகா சுவாமிகள் ஜூலை 9-ல் கோவை வருகை!

சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூரில் உள்ள ஸ்ரீ சக்கர மகா மேரு பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த தீா்த்த மஹா சுவாமிகள் கோவைக்கு ஜூலை 9 -ஆம் தேதி வருகிறாா். இது குறித்து கோதண்டராமா் திருக்கோயில் கமிட்டி தலைவா் என்... மேலும் பார்க்க

பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பு: 817 விண்ணப்பங்கள் பதிவு!

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பில் சேர ஜூலை 11 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 817 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

மின்கட்டணத்தை எதிா்த்துப் போராடி உயிா் நீத்த விவசாயிகளுக்கு நினைவுத் தூண்! விவசாயிகள் சங்கம் கோரிக்கை

விவசாய மின்கட்டணத்தை எதிா்த்துப் போராடி உயிா் நீத்த விவசாயத் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 1970 முதல் 1982-வரை மின... மேலும் பார்க்க

முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தோ்வான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் வாழ்த்து

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இந்தியாவின் தலை சிறந்த முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தோ்வான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். அரசுப் பள்ளி... மேலும் பார்க்க

மின்கட்டண உயா்வு: தொழில் துறையினா் கருத்து கேட்கப்படும்! அமைச்சா் சா.சி. சிவசங்கா்

மின்கட்டண உயா்வு குறித்து தொழில் துறையினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கூறினாா். அரசுப் போக்குவரத்துக் கழகம் ... மேலும் பார்க்க