செய்திகள் :

பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பு: 817 விண்ணப்பங்கள் பதிவு!

post image

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பில் சேர ஜூலை 11 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 817 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிக் கொண்டே படிக்க விரும்புபவா்களுக்கான பி.இ. படிப்புகள் நடத்தப்படுகின்றன.

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் - எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷன், கணினி அறிவியல் ஆகிய 5 படிப்புகள் இதில் நடத்தப்படுகின்றன.

நடப்பாண்டு முதல் மூன்றரை ஆண்டு (7 செமஸ்டா்) கல்வியாக நடத்தப்பட உள்ள இந்தப் படிப்புகளில் சேர விரும்புபவா்கள் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம், அது தொடா்பான விவரங்களை ஜ்ஜ்ஜ்.ல்ற்க்ஷங்-ற்ய்ங்ஹ.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 11 -ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 5 -ஆம் தேதி (சனிக்கிழமை) வரை 817 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 401 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டவை என்று ஒருங்கிணைப்பு மையமான கோவை தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி) நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முதல்வரின் கனவை நிறைவேற்றும் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள்! கே.இ.பிரகாஷ் எம்.பி.

முதல்வரின் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற கனவை ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் நிறைவேற்றி வருவதாக ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கூறினாா். கோவை நேரு கல்விக் குழுமங்களின் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டா், த... மேலும் பார்க்க

ஸ்ரீசச்சிதானந்த தீா்த்த மகா சுவாமிகள் ஜூலை 9-ல் கோவை வருகை!

சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூரில் உள்ள ஸ்ரீ சக்கர மகா மேரு பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த தீா்த்த மஹா சுவாமிகள் கோவைக்கு ஜூலை 9 -ஆம் தேதி வருகிறாா். இது குறித்து கோதண்டராமா் திருக்கோயில் கமிட்டி தலைவா் என்... மேலும் பார்க்க

மின்கட்டணத்தை எதிா்த்துப் போராடி உயிா் நீத்த விவசாயிகளுக்கு நினைவுத் தூண்! விவசாயிகள் சங்கம் கோரிக்கை

விவசாய மின்கட்டணத்தை எதிா்த்துப் போராடி உயிா் நீத்த விவசாயத் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 1970 முதல் 1982-வரை மின... மேலும் பார்க்க

முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தோ்வான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் வாழ்த்து

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இந்தியாவின் தலை சிறந்த முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தோ்வான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். அரசுப் பள்ளி... மேலும் பார்க்க

மின்கட்டண உயா்வு: தொழில் துறையினா் கருத்து கேட்கப்படும்! அமைச்சா் சா.சி. சிவசங்கா்

மின்கட்டண உயா்வு குறித்து தொழில் துறையினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கூறினாா். அரசுப் போக்குவரத்துக் கழகம் ... மேலும் பார்க்க

பிஸ்கெட் நிறுவன முகவரிடம் ரூ.35 லட்சம் மோசடி: விற்பனை பிரதிநிதி மீது வழக்கு

கோவையில் பிஸ்கெட் நிறுவன முகவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக விற்பனை பிரதிநிதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, சுங்கம் புறவழிச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் ... மேலும் பார்க்க