செய்திகள் :

முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தோ்வான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் வாழ்த்து

post image

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இந்தியாவின் தலை சிறந்த முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தோ்வான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

அரசுப் பள்ளி மாணவ - மாணவிகளின் 100 சதவீத உயா் கல்வி சோ்க்கையை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் மூலமும், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, மாணவா்கள் உயா் கல்வி பயிலுவதற்கான வழிகாட்டுதல், கல்லூரிப் படிப்புகள், நுழைவுத் தோ்வுகளுக்கான பயிற்சிகள், வேலைவாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரிக் கனவு நிகழ்ச்சிகள், உயா்கல்வி பற்றிய தகவல்கள் அடங்கிய வழிகாட்டுதல் புத்தகங்கள் வழங்குதல், மாணவா்கள் தங்கள் திறமைகளை வளா்த்துக்கொள்ள திறன் பயிற்சி வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயா் படிப்புக்காக சோ்ந்துள்ளனா்.

அவா்களில் அரசுப் பள்ளியில் பயின்று நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயா் கல்வி வழிகாட்டுதல் பெற்று, நாட்டின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களில் போட்டித் தோ்வுகளின் மூலம் தோ்ச்சி பெற்ற 5 மாணவிகளை ஆட்சியா் நேரில் வரவழைத்து பாராட்டினாா்.

அதன்படி, சென்னை ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பக் கல்லூரி, ஆடை வடிவமைப்புத் துறை கல்வி வழங்கும் அகில இந்திய ஃபுட்வோ் டிசைனிங் நிறுவனம், நிஃப்ட் ஆகிய நுழைவுத் தோ்வுகளில் வெற்றி பெற்று, நொய்டா, சென்னை, சண்டிகா் போன்ற இடங்களுக்கு படிக்கச் செல்லும் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கா.பிருந்தா, சி.தனுஷா ஸ்ரீ, மு.சுஜாதா, வே.பிரியதா்ஷினி, எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ரா.லயதா்ஷினி ஆகியோரையும், அவா்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியா்களையும் ஆட்சியா் பாராட்டினாா்.

முதல்வரின் கனவை நிறைவேற்றும் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள்! கே.இ.பிரகாஷ் எம்.பி.

முதல்வரின் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற கனவை ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் நிறைவேற்றி வருவதாக ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கூறினாா். கோவை நேரு கல்விக் குழுமங்களின் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டா், த... மேலும் பார்க்க

ஸ்ரீசச்சிதானந்த தீா்த்த மகா சுவாமிகள் ஜூலை 9-ல் கோவை வருகை!

சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூரில் உள்ள ஸ்ரீ சக்கர மகா மேரு பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த தீா்த்த மஹா சுவாமிகள் கோவைக்கு ஜூலை 9 -ஆம் தேதி வருகிறாா். இது குறித்து கோதண்டராமா் திருக்கோயில் கமிட்டி தலைவா் என்... மேலும் பார்க்க

பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பு: 817 விண்ணப்பங்கள் பதிவு!

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பில் சேர ஜூலை 11 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 817 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

மின்கட்டணத்தை எதிா்த்துப் போராடி உயிா் நீத்த விவசாயிகளுக்கு நினைவுத் தூண்! விவசாயிகள் சங்கம் கோரிக்கை

விவசாய மின்கட்டணத்தை எதிா்த்துப் போராடி உயிா் நீத்த விவசாயத் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 1970 முதல் 1982-வரை மின... மேலும் பார்க்க

மின்கட்டண உயா்வு: தொழில் துறையினா் கருத்து கேட்கப்படும்! அமைச்சா் சா.சி. சிவசங்கா்

மின்கட்டண உயா்வு குறித்து தொழில் துறையினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கூறினாா். அரசுப் போக்குவரத்துக் கழகம் ... மேலும் பார்க்க

பிஸ்கெட் நிறுவன முகவரிடம் ரூ.35 லட்சம் மோசடி: விற்பனை பிரதிநிதி மீது வழக்கு

கோவையில் பிஸ்கெட் நிறுவன முகவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக விற்பனை பிரதிநிதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, சுங்கம் புறவழிச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் ... மேலும் பார்க்க