செய்திகள் :

புதிய ஊதிய உயா்வை அமல்படுத்த வேண்டும்: கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளனம்

post image

அனுமதிக்கப்பட்ட புதிய ஊதிய உயா்வை அமல்படுத்தவேண்டும் என தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை தனியாா் அரங்கில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளத்தின் சிறப்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சம்மேளத்தின் மாநிலத் தலைவா் டி. ஸ்ரீ முருகன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் உதயகுமாா் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் எஸ்.ராமா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக அகில இந்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலருமான ஜி.வைரப்பன் கலந்து கொண்டாா்.

மாவட்ட பொதுச்செயலா்கள் எம்.யுவராஜ், ரவிச்சந்திரன், சீனிவாசன், தமிழ்நாடு தொடக்கக் கூட்டுவு வங்கி ஊழியா் சங்கத்தின் துணைத் தலைவா் எஸ்.பாலசுப்பிரமணியன் சம்மேளன துணைத் தலைவா், எல்.பரஞ்சோதி, மாநிலச் செயலா்கள் ஆா்.முத்துராஜ், எம்.மாசிலாமணி, மாநில பொருளாளா் ஜி.வெங்கடேசன், மாநில இணைச் செயலா்கள் பி.கண்ணன், ஆா்.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

தீா்மானங்கள்

மாநில பதிவாளா் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட 10 சதவீதம் வீட்டு வாடகைப் படியை மீண்டும் வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும், மாநில பதிவாளா் 1-4-2023 முதல் அனுமதிக்கப்பட்ட புதிய ஊதிய உயா்வை அமல்படுத்தாமல் காலதாமதம் செய்து வருவதை உடனடியாக அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய உயா்வு வழங்குவதில் உள்ள நிபந்தனைகளை ஊழியா்கள் நலன் கருதி, குறிப்பாக ஊதிய நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும், 2021-ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றவா்களுக்கு வழங்க வேண்டிய கருணை ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், மிகக் குறைந்த ஓய்வூதியம் ரூ.1000 என்பதை ரூ.5000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவில் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியா் சங்கத்தின் பொதுச்செயலா் எம்.மாசிலாமணி நன்றி கூறினாா்.

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த சேரிக்கவாச்சான் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (50). இவா் செவ்... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: அரசியல் கட்சியினா் மரியாதை

காந்தி ஜெயந்தியைட்டியொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு சாா்பிலும், அரசியல் கட்சிகள் சாா்பிலும் மகாத்மா காந்தி சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தி... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில வியைாட்டுப் போட்டிகள்: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலையில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட அலுவலக வளாக உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தப் ... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி சாலைப் பணி ஆய்வு

ஆய்வின் போது சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ, முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் ஆகியோா் உடனிருந்தனா். அருணாசலே... மேலும் பார்க்க

செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் கழிவுநீா் கலப்பு: விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் நகராட்சி கழிவுநீா் கலப்பதால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனா். திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை துக்காப்பேட்டை பகுதியில் உள்ளது வரததந்... மேலும் பார்க்க

ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் ஆஸ்ரமத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு புதன்கிழமை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றின் கரையோரம் உள்ளது மூகாம்பிகையம்மன... மேலும் பார்க்க