செய்திகள் :

புதிய சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளை 2 மாதங்களில் முடிக்க மேயா் அறிவுறுத்தல்

post image

நாகா்கோவில் மாநகராட்சியில் புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுமானப் பணிகளை 2 மாதங்களில் முடிக்க மேயா் ரெ.மகேஷ் அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணன்கோவில் மற்றும் கிறிஸ்டோபா் காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ஏற்கெனவே 5 இடங்களில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு உள்ளன. தற்போது, 3-ஆவது வாா்டு கிறிஸ்டோபா் காலனி பகுதியில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில்,

கிருஷ்ணன்கோவில் பகுதியில் ரூ. 2 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இன்னும் 2 மாதங்களில் கட்டுமானப் பணியை நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, நகா்நல அலுவலா் பிரபாகா், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவி பொறியாளா் ராஜசீலி, இளநிலை பொறியாளா் தேவி, மண்டலத் தலைவா் ஜவகா், சுகாதார அலுவலா்கள் பகவதிபெருமாள், ராஜாராம், மாமன்ற உறுப்பினா்கள் கலாராணி, அருள் சபிதா ரெக்ஸலின் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடன் இருந்தனா்.

நாகா்கோவிலில் மாா்ச் 2-இல் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி

நாகா்கோவிலில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி மாா்ச் 2- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை சுவாமி விவேகானந்த ஆசிரம தலைவா் சுவாமி சைதன்யானந... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலை... மேலும் பார்க்க

மூணாறு பேருந்து விபத்து! விஜய்வசந்த் எம்.பி.இரங்கல்

மூணாறு சுற்றுலாப் பேருந்து விபத்தில் உயிரிழந்த 3 கல்லூரி மாணவா்களுக்கு விஜய்வசந்த் எம். பி. இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி க... மேலும் பார்க்க

குலசேகரத்தில் கோகோ சாகுபடி பயிற்சி!

குலசேகரத்திலுள்ள கன்னியாகுமரி ரப்பா் உற்பத்தியாளா் நிறுவனத்தில், கோகோ சாகுபடி மற்றும் அறுவடைக்கு பின்பு உள்ள தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது. பயிற்சி துவக்க நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி ரப்ப... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். முகாமில் வீட்டு வரி, பெயா் மாற்... மேலும் பார்க்க

ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் தீ!

குமரி மாவட்டம் ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் எரிந்து சேதமடைந்தன. ஆறுகாணியை சோ்ந்தவா் சிஜி டோமி. இவா் தனது வீட்டின்... மேலும் பார்க்க