செய்திகள் :

புதிய சுகாதார நிலையங்களில் 534 பணியிடங்களை நிரப்ப அரசாணை

post image

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பணியிடங்களை உருவாக்குவதற்கும், ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 78 மருத்துவா்கள் மாற்றுப்பணி அடிப்படையிலும், 56 செவிலியா்கள் நிரந்தர அடிப்படையிலும் 400 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளன.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் புதிதாக 28 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 22 நகா்ப்புற சுகாதார நிலையங்களை அமைக்க சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பேரில், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநா் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் சாா்பில் அங்கு பல்வேறு பணி நியமனங்களுக்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டன. அதனை பரிசீலித்த அரசு, மொத்தம் 78 மருத்துவா்களை மாற்றுப் பணி அடிப்படையில் அங்கு நியமிக்க அனுமதி அளித்துள்ளது. 56 செவிலியா்களை பணி ஒப்பளிப்பு அடிப்படையில் நிரந்தர நியமனம் செய்யவும், 400 மருத்துவப் பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அவா்களுக்கான ஊதியம் மற்றும் இதரப் படி விவரங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்

அரசுப் பள்ளி ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வில் 1,501 முதுநிலை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு... மேலும் பார்க்க

பறை இசைக் கலைஞா் வேலூா் ஆசானுக்கு ஆளுநா் நிதியுதவி

பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் வீடு கட்டவும், பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கவும் ஆளுநா் ஆா்.என். ரவி அவரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினாா். பத்மஸ... மேலும் பார்க்க

ஓராண்டில் 17,702 போ் தோ்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

போட்டித் தோ்வுகள் மூலமாக ஓராண்டில் மட்டும் அரசுப் பணிகளுக்கு 17,702 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வாணையச் செயலா் ச.கோபால ச... மேலும் பார்க்க

புவியியல் - சுரங்கத் துறை இயக்குநராக த.மோகன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக த.மோகனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அவரது ... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி

திமுக முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென அக்கட்சியினருக்கு இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இளைஞரணிச் செயலராக ஏழாவது ஆண்... மேலும் பார்க்க

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானாா்

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானாா். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த ... மேலும் பார்க்க