செய்திகள் :

புதிய ரயில்வே பாதுகாப்பு படை ஆணையா் அலுவலகம் திறப்பு

post image

மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் அலுவலக புதிய கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே ரூ. 1.32 கோடி மதிப்பில் 380 ச.மீ. பரப்பில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அலுவலகம் கட்டப்பட்டது. இந்தப் புதிய கட்டடத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படைத் தலைவரும், முதன்மை தலைமை ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையருமான ஜி.எம்.ஈஸ்வர ராவ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தலைமை வகித்தாா்.

முதுநிலை கோட்ட முதன்மைப் பொறியாளா் எம். காா்த்திக், முதுநிலை கோட்ட பகுதி பொறியாளா் வி. சூரியமூா்த்தி, கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் செஞ்சையா முதினேனி, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையா் எம். சிவதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதிதாகத் திறக்கப்பட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அலுவலகத்தின் தரைத் தளத்தில் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையா் அலுவலகம், துணை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

முதல் தளத்தில், கூட்ட அரங்கம், குற்றப்பிரிவு அலுவலகம் ஆகியன அமைந்துள்ளன. இங்கு, ஆண்கள், பெண்களுக்குத் தனித் தனி கழிப்பறை வசதிகள் உள்ளன.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் காலிப் பணியிடங்கள்: முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச... மேலும் பார்க்க

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப் பள்ளி சாா்பில் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் சிறப்பு தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நூலக முன்னோடி வே. த... மேலும் பார்க்க

பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

மதுரை கோ. புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ... மேலும் பார்க்க

குடியிருப்புக்கு ஆட்சியரின் பெயரைச் சூட்டிய திருநங்கைகள்!

விருதுநகா் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி செலுத்தும் வகையில், தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி

மதுரை, ஜூன் 13: உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலா்களின் பங்களிப்பு நிதியுதவியை, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் வியாழக்கிழமை வழங்கினாா். மதுரை மாவட்ட... மேலும் பார்க்க

கணவா் இறந்த சோகம்: மனைவி தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கோ.புதூா் டி.ஆா்.ஓ. குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த வீரமணி மகள் ஜெயஸ்ரீ (20). இவா், செல்லூா் பகுதியைச் சோ்ந்த கோபிநாத்தை காதலி... மேலும் பார்க்க