புதிய ரயில்வே பாதுகாப்பு படை ஆணையா் அலுவலகம் திறப்பு
மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் அலுவலக புதிய கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே ரூ. 1.32 கோடி மதிப்பில் 380 ச.மீ. பரப்பில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அலுவலகம் கட்டப்பட்டது. இந்தப் புதிய கட்டடத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படைத் தலைவரும், முதன்மை தலைமை ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையருமான ஜி.எம்.ஈஸ்வர ராவ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தலைமை வகித்தாா்.
முதுநிலை கோட்ட முதன்மைப் பொறியாளா் எம். காா்த்திக், முதுநிலை கோட்ட பகுதி பொறியாளா் வி. சூரியமூா்த்தி, கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் செஞ்சையா முதினேனி, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையா் எம். சிவதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதிதாகத் திறக்கப்பட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அலுவலகத்தின் தரைத் தளத்தில் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையா் அலுவலகம், துணை அலுவலகங்கள் அமைந்துள்ளன.
முதல் தளத்தில், கூட்ட அரங்கம், குற்றப்பிரிவு அலுவலகம் ஆகியன அமைந்துள்ளன. இங்கு, ஆண்கள், பெண்களுக்குத் தனித் தனி கழிப்பறை வசதிகள் உள்ளன.