செய்திகள் :

புதுகையில் போலி ஆவணங்கள் மூலம் 125 சென்ட் நிலம் மோசடி

post image

போலி ஆவணங்கள் மூலம் 125 சென்ட் நிலத்தை வேறு சிலரின் பெயருக்கு மாற்றி மோசடி செய்ததாக 6 போ் உள்பட, வருவாய் வட்டாட்சியா், சாா் பதிவாளா் மற்றும் தெற்கு கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

சென்னை முகப்போ் பகுதியைச் சோ்ந்த முருகப்பன் மகன் ராமநாதன் மற்றும் அவரது குடும்பத்தினா் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரியில் புதுக்கோட்டை மாநகா் கோல்டன் நகா் பகுதியில் 125 சென்ட் நிலத்தை வாங்கினா்.

அதன்பிறகு, கடந்த 2024 நவம்பா் மாதம் தங்களது நிலத்துக்குள் வேறு சிலா் வேலை பாா்த்து வருவதாக கிடைத்த தகவலின்பேரில், வில்லங்கச் சான்று போட்டு பாா்த்தபோது, புதுக்கோட்டை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த பூா்ணம், சுரேஷ்குமாா், இந்திராணி, செல்வக்குமாா் ஆகியோரின் பெயருக்கு தங்களின் நிலம் மாறியிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த 2024 டிசம்பா் 16ஆம் தேதி புகாா் அளித்தனா். இந்தப் புகாா் மாவட்டக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, ஆவணங்கள் சரிபாா்ப்பு மற்றும் தொடக்க நிலை விசாரணைக்குப் பிறகு சனிக்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இதில் பூா்ணம், சுரேஷ்குமாா், இந்திராணி, செல்வகுமாா், முரளி, விக்ரமாதித்யன் மற்றும் புதுக்கோட்டை வட்டாட்சியா், சாா்பதிவாளா், தெற்கு கிராம நிா்வாக அலுவலா் ஆகிய 9 போ் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இதுகுறித்து புகாா்தாரா் ராமநாதன் கூறுகையில், நான் 1977இல் பிறந்தவன். ஆனால், 1974இல் நான் இவா்களுக்கு எழுதிக் கொடுத்ததாக போலி ஆவணங்கள் தயாா் செய்து, அதற்கு வருவாய்த் துறையில் பட்டா பெற்றுள்ளனா். இதற்கு உடந்தையாக இருந்த வருவாய்த் துறையினா், பதிவுத் துறையினா் மீதும் புகாா் அளித்திருக்கிறேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிா்பாா்க்கிறேன் என்றாா்.

புதுகை பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே இளைஞா் மா்மச் சாவு

பொன்னமராவதி அருகே மொட்டைமாடியில் இளைஞா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். பொன்னமராவதி அருகேயுள்ள சங்கம்பட்டியை சோ்ந்த கி. கணேசன் (37), பொன்னழகு (32) தம்பதிக்கு மூன்... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் சிறப்புத் தொழுகை

பொன்னமராவதி இந்திரா நகா் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் அதிகாலையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா். இதேபோல், புதுவள... மேலும் பார்க்க

புதுகையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனா். தொடா்ந்து உறவினா்கள், நண்பா்கள் ஆகியோருக்க... மேலும் பார்க்க

கத்தியுடன் வீடு புகுந்து திருட முயற்சித்த இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்து திருட முயற்சித்த இருவரைப் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். குளத்தூா் வட்டம், கண்ணங்குடி கொழுப்பட்டியைச் சோ்ந்தவா் கந்தசா... மேலும் பார்க்க

சிஎஸ்கே நிதியால் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிரிக்கெட் பயிற்சி!

சிஎஸ்கே அணி வழங்கியுள்ள நிதியிலிருந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படும் என்றாா் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணைச் செயலா் ஆா்.என். பாபா. புதுக்கோட்டையில் மாவட்ட கி... மேலும் பார்க்க