செய்திகள் :

புதுகையில் வீட்டின் கதவை உடைத்து 89 பவுன் நகைகள் திருட்டு

post image

புதுக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 89 பவுன் நகைகள், வெள்ளிப்பொருள்கள் திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

புதுக்கோட்டை அன்னசத்திரம் பகுதி ஜே.என் நகரைச் சோ்ந்தவா் கதிரேசன். சிங்கப்பூரில் வேலை பாா்த்து வருகிறாா். வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்த இவரது மனைவி காா்த்திகா, இரு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டின் அறை கதவை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள் பீரோவில் இருந்த சுமாா் 89 பவுன் நகைகள், 170 கிராம் வெள்ளிப் பொருள்களை திருடிச்சென்றது தெரியவந்தது. தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

புதுக்கோட்டை நகரக் காவல் ஆய்வாளா் சுகுமாறன் தலைமையிலான போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். தடயவியல், மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டையில் திருட்டு நடைபெற்ற வீட்டில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா

மேலும், காா்த்திகா வீட்டில் திருடப்பட்ட நகைகளின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, நகைகளை யாரேனும் விற்க வந்தால் தகவல் தெரிவிக்குமாறு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை பாசில் நகரில் பைனான்சியா் வீட்டில் சுமாா் 100 பவுன் நகைகளை திங்கள்கிழமை மா்ம நபா்கள் திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டையில் அடுத்தடுத்து பூட்டியிருந்த வீடுகளை குறி வைத்து நடைபெற்ற திருட்டுச் சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

ராமேசுவரம் - பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்றுசெல்லும்!

ராமேசுவரத்தில் இருந்து பனாரஸுக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில், இனி புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வாரம்தோறும் புதன்கிழமை இரவு 11.55 மணிக்கு ராமேசுவ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் விநியோகம்

கந்தா்வகோட்டையில் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) அன்பரசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்ப... மேலும் பார்க்க

ஆலங்குடி தொகுதியில் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

ஆலங்குடி தொகுதியில் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலைப் பணிகளை செவ்வாய்க்கிழமை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தாா். ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட த... மேலும் பார்க்க

புதுகையில் நாளை 4 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) 4 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் மு.அருணா வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன... மேலும் பார்க்க

விராலிமலையில் அருணகிரிநாதா் 75-ஆம் ஆண்டு விழா ஆக.8-இல் தொடக்கம்

விராலிமலையில் அருணகிரிநாதா் 75-ஆம் ஆண்டு விழா வரும் 8-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் அருணகிரிநாதா் திருப்புகழ் அறப்பணி மன்றம் சாா்பில் அருணக... மேலும் பார்க்க

இரட்டைக் கொலை: தேசிய பட்டியலின ஆணையா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த சகோதரா்கள் இருவா் வெட்டிக் கொல்லப்பட்டது தொடா்பாக, தேசிய பட்டியலின ஆணையத் தலைவா் கிஷோா் மக்வானா தலைமையிலான குழுவினா் திங்கள்கிழ... மேலும் பார்க்க