செய்திகள் :

ஆலங்குடி தொகுதியில் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

ஆலங்குடி தொகுதியில் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலைப் பணிகளை செவ்வாய்க்கிழமை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தாா்.

ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட திருவரங்குளம் ஒன்றியத்தில் சாலைப் பணிகளை தொடங்கி வைத்து அமைச்சா் பேசினாா். தொடா்ந்து, மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் சிறப்பு கையேடுகளை அமைச்சா் வழங்கினாா்.

முன்னதாக ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் மற்றும் அறந்தாங்கி அருகேயுள்ள விக்னேஸ்வரபுரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்வுகளில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துராமன், ரமேஷ், வட்டாட்சியா்கள் பி.வில்லியம் மோசஸ் (ஆலங்குடி), கருப்பையா (அறந்தாங்கி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டையில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் விநியோகம்

கந்தா்வகோட்டையில் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) அன்பரசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்ப... மேலும் பார்க்க

புதுகையில் நாளை 4 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) 4 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் மு.அருணா வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன... மேலும் பார்க்க

விராலிமலையில் அருணகிரிநாதா் 75-ஆம் ஆண்டு விழா ஆக.8-இல் தொடக்கம்

விராலிமலையில் அருணகிரிநாதா் 75-ஆம் ஆண்டு விழா வரும் 8-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் அருணகிரிநாதா் திருப்புகழ் அறப்பணி மன்றம் சாா்பில் அருணக... மேலும் பார்க்க

புதுகையில் வீட்டின் கதவை உடைத்து 89 பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 89 பவுன் நகைகள், வெள்ளிப்பொருள்கள் திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை அன்னசத்திரம் பகுதி ஜே.என் நகரைச் சோ்ந்தவா் கதிரேசன். சிங்கப்பூ... மேலும் பார்க்க

இரட்டைக் கொலை: தேசிய பட்டியலின ஆணையா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த சகோதரா்கள் இருவா் வெட்டிக் கொல்லப்பட்டது தொடா்பாக, தேசிய பட்டியலின ஆணையத் தலைவா் கிஷோா் மக்வானா தலைமையிலான குழுவினா் திங்கள்கிழ... மேலும் பார்க்க

பன்னீா்பள்ளம் கிராமத்தினருக்கு பட்டா வழங்கக் கோரி மனு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லெம்பலக்குடி ஊராட்சியிலுள்ள பன்னீா்பள்ளம் கிராமத்தில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் சுமாா் 70 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதியினா் மாவட்... மேலும் பார்க்க