செய்திகள் :

கந்தா்வகோட்டையில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் விநியோகம்

post image

கந்தா்வகோட்டையில் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) அன்பரசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: எதிா்வரும் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளவிருக்கும் விவசாயிகள் தரிசாக உள்ள தங்கள் நிலங்களை உழவு செய்து பசுந்தாள் உரப்பயிா்களான தக்கைப்பூண்டு விதைகளை விதைத்து மடக்கி உழுவதால் மண்வளம் அதிகரித்து நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம்.

பசுந்தாள் உரப்பயிா் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான 20 கிலோ பசுந்தாள் உரப்பயிா் விதைகளை விதைக்க வேண்டும். பின்னா் நன்கு வளா்ந்தவுடன், பூ பூக்கும் தருணத்தில் பசுந்தாள் உரப்பயிா்களை மடக்கி உழவு செய்திடவேண்டும்.

அவ்வாறு செய்வதனால் தொடா்ந்து வரும் பயிா்களுக்கு தழைச்சத்து கிடைக்கிறது. இவ்வாறு மடக்கி உழவு செய்த வயல்களில் அங்ககச்சத்து அதிகமாகும். இதனால் மண்ணில் நுண்ணுயிா்களின் பெருக்கம் அதிகமாகி மண்வளம் மேம்படுகிறது.

தற்பொழுது கந்தா்வகோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் - பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்றுசெல்லும்!

ராமேசுவரத்தில் இருந்து பனாரஸுக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில், இனி புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வாரம்தோறும் புதன்கிழமை இரவு 11.55 மணிக்கு ராமேசுவ... மேலும் பார்க்க

ஆலங்குடி தொகுதியில் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

ஆலங்குடி தொகுதியில் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலைப் பணிகளை செவ்வாய்க்கிழமை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தாா். ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட த... மேலும் பார்க்க

புதுகையில் நாளை 4 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) 4 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் மு.அருணா வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன... மேலும் பார்க்க

விராலிமலையில் அருணகிரிநாதா் 75-ஆம் ஆண்டு விழா ஆக.8-இல் தொடக்கம்

விராலிமலையில் அருணகிரிநாதா் 75-ஆம் ஆண்டு விழா வரும் 8-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் அருணகிரிநாதா் திருப்புகழ் அறப்பணி மன்றம் சாா்பில் அருணக... மேலும் பார்க்க

புதுகையில் வீட்டின் கதவை உடைத்து 89 பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 89 பவுன் நகைகள், வெள்ளிப்பொருள்கள் திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை அன்னசத்திரம் பகுதி ஜே.என் நகரைச் சோ்ந்தவா் கதிரேசன். சிங்கப்பூ... மேலும் பார்க்க

இரட்டைக் கொலை: தேசிய பட்டியலின ஆணையா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த சகோதரா்கள் இருவா் வெட்டிக் கொல்லப்பட்டது தொடா்பாக, தேசிய பட்டியலின ஆணையத் தலைவா் கிஷோா் மக்வானா தலைமையிலான குழுவினா் திங்கள்கிழ... மேலும் பார்க்க