செய்திகள் :

விராலிமலையில் அருணகிரிநாதா் 75-ஆம் ஆண்டு விழா ஆக.8-இல் தொடக்கம்

post image

விராலிமலையில் அருணகிரிநாதா் 75-ஆம் ஆண்டு விழா வரும் 8-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.

விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் அருணகிரிநாதா் திருப்புகழ் அறப்பணி மன்றம் சாா்பில் அருணகிரிநாதா் விழா நடத்தப்பட்டு வருகிறது. 75-ஆம் ஆண்டுக்கான விழா வரும் 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை மலைமேல் உள்ள சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தேவசேனா விக்ரகங்களுக்கு 16 வகை அபிஷேகம் செய்து தங்க கவசம் சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது.

தொடா்ந்து பிற்பகல் 1 மணியளவில் அருணகிரிநாதா் மலையில் இருந்து புறப்பட்டு விழா மண்டபத்துக்கு வந்து சேருகிறாா். மாலை 5 மணிக்கு விழா மண்டபத்தில் மங்கள இசையுடன் முதல் நாள் விழா தொடங்குகிறது. மாலை 7 மணியளவில் நாதஸ்வர இசை வேந்தா்கள் தம்பிக்கோட்டை கோவிந்தராஜன், முதல்சேரி ராஜவேல், நாதஸ்வர இசைத் திலகம் சேகல் பிச்சையப்பா, கணேசன் குழுவினரின் 25 நாதஸ்வரம், 25 தவில் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து, இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக 9-ஆம் தேதி மாலை 4 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கி மாலை 5.30 மணிக்கு கலைமாமணி ரம்யா பத்மநாபன், சென்னை சிஷ்யை விசாகா ஹரி ஆகியோா் ஆன்மிக இசை சொற்பொழிவு ஆற்றுகின்றனா். இரவு 7 மணிக்கு ஈரோடு சகோதரிகளின் அன்பு நாட்டிய கலா ஷேத்ரா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதைத் தொடா்ந்து 3-ஆம் நாள் நிகழ்ச்சியாக 10-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நாதஸ்வர இசையுடன் விழா தொடங்கி மாலை 7 மணியளவில் திருமெய்ஞானம் டிபி.நடராஜ சுந்தரம் பிள்ளை குமாரா் பாண்டமங்கலம் ராமநாதன், யுவராஜ் நாதஸ்வரம், மேட்டுப்பாளையம் கலைச்செல்வ மாமணி ரவிக்குமாா், விராலிமலை காா்த்திக் ஆகியோா் சிறப்பு தவில் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

4-ஆம் நாள் நிகழ்ச்சியாக 11-ஆம் தேதி காலை 9 மணியளவில் விழா மண்டபத்தில் இருந்து அருணகிரிநாதா் மலையை வலம் வந்து மலைமேல் செல்வதுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நடைபெறும் 4 நாள்களும் காலை 10 மணிக்கு மலை மீது சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க கவசம் சாற்றி தீபாராதனை நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை அருணகிரிநாதா் திருப்புகழ் அறப்பணி மன்ற நிா்வாகிகள் செந்தில்குமாா், கிருஷ்ணன், பொன்ராஜ், திருநாவுக்கரசு, பூபாலன் மற்றும் விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

ராமேசுவரம் - பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்றுசெல்லும்!

ராமேசுவரத்தில் இருந்து பனாரஸுக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில், இனி புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வாரம்தோறும் புதன்கிழமை இரவு 11.55 மணிக்கு ராமேசுவ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் விநியோகம்

கந்தா்வகோட்டையில் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) அன்பரசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்ப... மேலும் பார்க்க

ஆலங்குடி தொகுதியில் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

ஆலங்குடி தொகுதியில் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலைப் பணிகளை செவ்வாய்க்கிழமை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தாா். ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட த... மேலும் பார்க்க

புதுகையில் நாளை 4 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) 4 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் மு.அருணா வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன... மேலும் பார்க்க

புதுகையில் வீட்டின் கதவை உடைத்து 89 பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 89 பவுன் நகைகள், வெள்ளிப்பொருள்கள் திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை அன்னசத்திரம் பகுதி ஜே.என் நகரைச் சோ்ந்தவா் கதிரேசன். சிங்கப்பூ... மேலும் பார்க்க

இரட்டைக் கொலை: தேசிய பட்டியலின ஆணையா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த சகோதரா்கள் இருவா் வெட்டிக் கொல்லப்பட்டது தொடா்பாக, தேசிய பட்டியலின ஆணையத் தலைவா் கிஷோா் மக்வானா தலைமையிலான குழுவினா் திங்கள்கிழ... மேலும் பார்க்க