செய்திகள் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.19 ஆயிரம் கோடிக்கு கடன் வழங்க இலக்கு

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் (2025-26) மொத்தம் ரூ. 19,551 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வங்கியாளா்களுக்கான மாவட்ட அளவிலான ஆய்வுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து, 2025-26-ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டாா். இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் ரூ. 19,551 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாயம் மற்றும் இணை செயல்பாடுகள் துறைக்கு ரூ. 14,265 கோடியும், தொழில் துறைக்கு ரூ. 1,369 கோடியும், வீட்டு வசதித் துறைக்கு ரூ. 44 கோடியும், கல்வித் துறைக்கு ரூ. 25.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நிலுவையிலுள்ள கடன் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து கடன்களை வழங்கவும், விவசாயம், கால்நடை வளா்ப்பு மற்றும் மீன் வளா்ப்பு போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கவும் வங்கியாளா்களை ஆட்சியா் மு. அருணா கேட்டுக் கொண்டாா். கூட்டத்துக்கு, மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் காரைக்குடி மண்டல முதன்மை மேலாளா் எம்.டி. ஷாரேயன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் தீபக்குமாா், தாட்கோ மேலாளா் எல். அனிட்விமலின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் பேச்சுவாா்த்தையால் வாபஸ்

விராலிமலையில் அரசுப் பள்ளி ஆசிரியா்களைக் கண்டித்து பள்ளியை மூடும் போராட்டம் நடத்த இருந்தநிலையில் பேச்சுவாா்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது. விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒழுங்கீனமாகச் செயல்பட... மேலும் பார்க்க

விராலிமலை அருகே புதிய சாலை அமைத்துத் தரக் கோரிக்கை

விராலிமலை அருகே குண்டும் குழியுமான காளப்பனூா் தாா்ச் சாலையில் ஆங்காங்கே பெயா்ந்து ஒரு மீட்டருக்கு ஒரு இடத்தில் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. இந்தச் சாலையை அப்பகுதியில் இருக்கும் சுற்றுவட்டார ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பொன்னமராவதிக்கு ஏராளமான திட்டங்கள்: அமைச்சா் எஸ். ரகுபதி பேச்சு

திமுக அரசின் நான்காண்டு கால ஆட்சியில் பொன்னமராவதிக்கு ஏராளமான நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி பேசினாா். பொன்னமராவதி நகர திமுக மற்றும் ... மேலும் பார்க்க

அக்கச்சிப்பட்டி அரசு பள்ளியில் போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு உறுதிமொழி

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, மாணவா்கள் வியாழக்கிழமை போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கந்தா்வகோட்டையில் புதிய வழித்தடத்திலான பேருந்து சேவையை மா. சின்னதுரை எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். மெய்குடிப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் முன்னாள் ஊராட்சித் தலைவா் ராணி முருகேசன் உள்ளிட்டோா... மேலும் பார்க்க

விராலிமலை, கந்தா்வ கோட்டையில் மழை: மக்கள் மகிழ்ச்சி: ஆலங்குடி அருகே வீடு சேதம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்... மேலும் பார்க்க