செய்திகள் :

புதுச்சேரி: தொடர் தொல்லை அளிக்கும் அமைச்சர்! பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்

post image

புதுச்சேரியில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும் தற்போதைய நெடுங்காடு எம்எல்ஏ-வுமான சந்திரபிரியங்கா (35), தனக்கு அமைச்சர் ஒருவர் தொடர்ந்து தொல்லை அளித்து வருவதாக விடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதுகுறித்த விடியோவில் அவர் பேசுகையில்,

காரைக்காலில் ஒரு பதாகை பிரச்னை குறித்து நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை வந்தது. அந்தப் பதாகையில் எனது படமும் இருந்ததால், நான் பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

நீதிமன்றத்துக்கு செலவுகூட செய்யமுடியாத ஒருவர்தான் இதனைத் செய்துள்ளார் என்று தெரிந்தது. ஆனால், இதன் பின்னணியில் இருப்பது ஒரு அமைச்சர் என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது.

நான் அமைச்சர் பதவியில் இருந்தபோதும் பல தொல்லைகளை அளித்தார்; தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும்போதும் மேலும் தொல்லைகளை அளிக்கிறார். நான் செல்லும் பாதைகளெல்லாம் அவர் உளவாளி வைத்திருக்கிறார். நான் ஒரு பாதுகாப்பான இடத்தில் இல்லை என்பதும் எனக்கு தெரியும்.

இதனையெல்லாம் ஒரு உயர் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கச் சென்றால், அவருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சராகவும், எம்எல்ஏ-வாகவும் இருக்கும் எனக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை. மக்கள்தான் நமக்கு முதலாளி.

நீங்கள் எனக்கு தொல்லை அளிக்கிறீர்கள் என்பதைக் காட்டத்தான் இந்த விடியோ. ஒரு பெண்தானே என்று ஏளனமாக பார்க்காதீர்கள். எல்லா தொகுதியிலும் பெண்கள் வாக்குதான் அதிகம். நீங்களும் வாழுங்க, என்னையும் வாழ விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் சந்திரபிரியங்கா வெளியிட்டுள்ள இந்த 12 நிமிட 23 வினாடி விடியோவால் புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chandra Priyanka MLA files torture complaint against MInister

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஒரு சவரண் ஆபரணத் தங்கத்தின் விலை 78 ஆயிரத்தை நெருங்குகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.9,705க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640-க்கும் வ... மேலும் பார்க்க

பூலித்தேவருக்கு தேசம் உளமாற மரியாதை செலுத்துகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி

பூலித்தேவரின் பிறந்த நாளில், தேசம் அவருக்கு உளமாற மரியாதை செலுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவரின் பிறந்த நாளில், தேச... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 29,360 கனஅடியிலிருந்து வினாடிக்கு 31,854 கனஅடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு அனைத்து வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் (Cologne) நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு - ஜெர்மனி வ... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - சவுக்கு சங்கர்

-சவுக்கு சங்கர். ஊடகவியலாளர்-திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வா் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவா். பின்னா்1944-இல் திராவிடா் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியாா் ஈ.வெ.ரா. உடன் சோ்ந்து த... மேலும் பார்க்க

மதுரை மாநாடு ஒத்திவைப்பு: ஓ. பன்னீர்செல்வம்

மதுரையில் செப்.4-இல் நடைபெறவிருந்த அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு ஒத்திவைக்கப்படவுள்ளதாக முன்னாள் முதல்வா் ஒ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். உயா்நிலைக் குழுவின் ஆலோசனையின்படி ... மேலும் பார்க்க