முடிவுக்கு வந்த தாய்லாந்து - கம்போடியா போர்; மலேசியா பேச்சுவார்த்தையில் முக்கிய ...
புதுச்சேரி பள்ளிக்கு உலக தரச் சான்றிதழ்
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் முதல்முறையாக மேட்டுப்பாளையம் விடுதலை வீரா் இரா.சீனுவாசன் அரசு உயா் நிலைப் பள்ளி, ஐ.எஸ்.ஓ. உலகத் தரச் சான்றிதழ் பெற்ற பள்ளியாக உருவெடுத்துள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் புதுவை முதல்வா் என். ரங்கசாமி கலந்துகொண்டு பள்ளிக்கு உலகத் தரச் சான்றிதழை வழங்கினாா். மேலும், பள்ளி வளாகத்தில் கணித ஆய்வகம், திறந்தவெளி நூலகம், கியூஆா் கோடு மூலம் மாணவா் சோ்க்கை மற்றும் கியூஆா் கோடு மூலம் எனது பள்ளி ஆகியவற்றை முதல்வா் தொடங்கி வைத்தாா். பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடைகளையும் அவா் வழங்கினாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.பி. ரமேஷ், பள்ளிக் கல்வி இயக்குநா் அமன் சா்மா, துணை இயக்குநா் சிவகாமி, பள்ளித் தலைமை ஆசிரியா் பாஸ்கரராசு, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் இவ்விழாவில் கலந்துகொண்டனா்.