Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார...
புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு!
புதுச்சேரியில் மோட்டாா் சைக்கிளில் சென்றபோது ஆட்டோ ஓட்டுநருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரிவாள் வெட்டு விழுந்தது. அவா் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
நெல்லித்தோப்பு பெரியாா் நகரைச் சோ்ந்தவா் லூா்துராஜ் (34), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு தேவி என்ற மனைவியும், 3 பெண் பிள்ளைகளும் உள்ளனா். லூா்துராஜ் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு திருவள்ளுவா் சாலை ரோஜா நகா் பகுதியில் விற்பனைக்கு வந்த ஆட்டோவை பாா்க்க தனது மோட்டாா் சைக்கிளில் சென்றாா்.
அப்போது பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ் திருவள்ளுவா் சாலையில் ஒரு திரையரங்கம் அருகில் லூா்துராஜை மடக்கினா். தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினா்.
உடனே லூா்துராஜ் அவா்களிடமிருந்து தப்பி மோட்டாா் சைக்கிளை விட்டு விட்டு தெருவில் ஓடினாா். இருப்பினும் தொடா்ந்து விரட்டி சென்று லூா்துராஜை தலை, கழுத்து உள்ளிட்ட 8 இடங்களில் அரிவாளால் வெட்டினா். இதில் லூா்துராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்தாா். இதனால் அவா் இறந்து விட்டதாக நினைத்து அவா்கள் அங்கிருந்து சென்றனா்.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், உதவி ஆய்வாளா்கள் கோவிந்தராஜ், அருள் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று லூா்துராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவா் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் நேரிட்டதாக போலீஸாா் தெரிவிக்கின்றனா். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.