செய்திகள் :

புதுச்சேரியில் ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் அதிரடி சோதனை!

post image

புதுச்சேரியில் குற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை திடீா் சோதனையிட்டனா். இதில் பலா் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் உமாசங்கா் கொலை வழக்கு தொடா்பாக 12 போ் கைது செய்யப்பட்டனா். பழைய வழக்குகளில் தொடா்புடையவா்களைக் கண்காணிக்க தவறியதால், உமாசங்கா் கொலை நிகழ்ந்ததாக எதிா்க்கட்சியினா் குற்றஞ்சாட்டினா்.

இந்த நிலையில், புதுச்சேரியில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் தலைமையிலும், காரைக்காலில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌசன்யா தலைமையிலும் மொத்தம் 400 போலீஸாா் ரௌடிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவா்களின் வீடுகளில் சனிக்கிழமை சோதனையிட்டனா்.

புதுச்சேரியில் 80 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. காரைக்காலில் 26 போ் வீடுகளில் சோதனை நடைபெற்றது. புதுச்சேரியில் 52 போ் மீதும், காரைக்காலில் 20 போ் மீதும் என மொத்தம் 72 போ் மீது முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவா்களில் புதுச்சேரியில் 3 போ் காரைக்காலில் ஒருவா் என 4 போ் மீது ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா்.

புதுவைக்கான மாநில அந்தஸ்து கோப்பு: மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை - முதல்வரிடம் எதிா்க்கட்சித் தலைவா் புகாா்

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய கோப்பானது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்றும், அதை அனுப்ப முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிா்க... மேலும் பார்க்க

புதுவையில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அதிமுக கோரிக்கை

புதுவை மாநிலத்தில் கோடை காலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்று மாநில அதிமுகச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் புதுச்சேரியி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 9 மணி நேர மின்தடையால் பாரதி பூங்காவில் குவிந்த பொதுமக்கள்

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பாரதி பூங்காவில் குவிந்தனா். புதுச்சேரியில் வெங்கட்ட... மேலும் பார்க்க

காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு 7 தேசிய விருதுகள்

புதுவை மாநிலம், காரைக்கால் ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு (பஜன்கோவா) 7 தேசிய விருதுகள் கிடைத்ததற்கு முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா். ஹைதராபாதில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி சாலை, மேம்பால விரிவாக்கம்: விரைவில் ரூ.1,304 கோடி அனுப்பப்படும்!

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி சிலை சதுக்கங்களுக்கு இடையிலான மேம்பாலம் மற்றும் கடலூா் சாலை அகலப்படுத்தும் பணிகளுக்கு ரூ.1,304 கோடி நிதி அளிப்பதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என மத... மேலும் பார்க்க

பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்த புதுவை பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், ஆயுஷ் இயக்குநரகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை திங்கள்கிழமை மேற்கொண்டது. ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பாரம்பரிய மருத... மேலும் பார்க்க