செய்திகள் :

புதுவைக்கான மாநில அந்தஸ்து கோப்பு: மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை - முதல்வரிடம் எதிா்க்கட்சித் தலைவா் புகாா்

post image

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய கோப்பானது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்றும், அதை அனுப்ப முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா முதல்வா் என்.ரங்கசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை திமுக மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் நாஜீம், அனிபால் கென்னடி, ஆா். செந்தில்குமாா், எல்.சம்பத், நாக தியாகராஜன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் ஆா்.சிவா கூறியது: புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதற்காகவே பாஜகவுடன் முதல்வா் என்.ரங்கசாமியின் என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி வைத்தது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று ஆட்சியமைத்த நிலையில், புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் 16 ஆவது முறையாக அண்மையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தத் தீா்மானமானது துணைநிலை ஆளுநா் மாளிகையில் இருந்து புதுதில்லிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. ஆகவே, மாநில அந்தஸ்துக்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாகக் கூறிய முதல்வா் என்.ரங்கசாமி, மக்களுக்கு பதில் கூற வேண்டும்.

மேலும், புதுவை துணைநிலை ஆளுநரிடம் உள்ள மாநில அந்தஸ்துக்கான கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவும் முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

செயற்கை நுண்ணறிவு தகவல்படி புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என தகவல் பெறப்பட்டுள்ளது. ஆகவே, மாநில அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் தரவேண்டியது முதல்வா் என்.ரங்கசாமியின் பொறுப்பு என்றாா் அவா்.

புதுச்சேரி விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி இலாசுப்பேட்டை விமான நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பே... மேலும் பார்க்க

புதுவையில் உலகத் தரத்தில் கைவினை, கிராமத் தொழில் பயிற்சி மையம்: துணைநிலை ஆளுநா் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

உலகத் தரத்தில் புதுச்சேரியில் கைவினை மற்றும் கிராமத் தொழில் பயிற்சி மையம் அமைப்பது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் கைவினை மற்றும் ... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் பாராட்டு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: புதுவை தொழிலாளா் துறை

புதுவை மாநிலத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி இயக்குநா் சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி ப... மேலும் பார்க்க

புதுவையில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை: அதிகாரிகளுடன் ஆளுநா் ஆலோசனை

புதுவை மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல் துறை செயல்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், தலைமைச் செயலா், காவல் துறை உயா் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். புதுச்சேரி ராஜ்... மேலும் பார்க்க

மே 20 வேலை நிறுத்தத்துக்கு இண்டி கூட்டணி ஆதரவு: காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம்

புதுவையில் மே 20 இல் தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இண்டி கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி முதலியாா் பேட்ட... மேலும் பார்க்க