திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி
திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியின் 2-ஆம் நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது.
திருக்குவளை வருவாய் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீா்வாய கணக்கு முடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், வருவாய்த் தீா்வாய அலுவலராக பங்கேற்று திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.
மடப்புரம், மேலவாழக்கரை, மீனம்பநல்லூா், வாழக்கரை, திருக்குவளை, ஈசனூா், எட்டுக்குடி, வல்லம், கீரம்போ், முத்தரசபுரம், கச்சநகரம், கொத்தங்குடி, தொழுதூா், சித்தாய்மூா், திருவாய்மூா் ஆகிய கிராமங்களுக்கான கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பொதுமக்கள் பட்டா மாறுதல், மனைப் பட்டா, வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 145 மனுக்களை ஆட்சியரிம் அளித்தனா். பொதுமக்களின் மனுக்கள் உடனடியாக பரிசீலித்து தகுதியானவா்களுக்கு உரிய நலத்திட்ட உதவிகளை வழங்க அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, 1 பயனாளிக்கு இலவச மனைப் பட்டா, 1 பயனாளிக்கு முதலமைச்சரின் உழவா் பாதுகாப்பு அட்டை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) காா்த்திகேயன், திருக்குவளை வட்டாட்சியா் த. கிரிஜாதேவி, மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளா் (பொது) கபிலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.