செய்திகள் :

மக்கள் தொடா்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்

post image

சீா்காழி அருகேயுள்ள பச்சைபெருமாநல்லூா் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, 37 பயனாளிகளுக்கு ரூ.8,99,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது: மனைப் பட்டா இல்லாதவா்கள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். பெண்கள் மகளிா் குழுக்களை பயன்படுத்திகொள்ள வேண்டும். ஏதேனும் தொழில் தொடங்க வேண்டுமென்றால் கடனுதவி பெற்றுக் கொள்ளலாம். மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலம் உங்கள் வீடுகளுக்கே வந்து பரிசோதனை செய்து, மருந்துகள் வழங்குகின்றனா். வருவாய்த்துறையின் உழவா் பாதுகாப்பு திட்டம், முதியோா் உதவித்தொகை போன்ற திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பட்டா இருந்தால் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடு கட்டி, பயனடையலாம் என்றாா்.

சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலா் உமாமகேஸ்வரி, வேளாண்மை துறை இணை இயக்குநா் சேகா், சமூகப் பாதுகாாப்பு துணை ஆட்சியா் உமாமகேஸ்வரன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் மலைமகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

மயிலாடுதுறையில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, இக்குழுத் தலைவா் ஆா். சுதா எம்பி தலைமை வகித்தாா். ம... மேலும் பார்க்க

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்தது. இப்பள்ளி மாணவி ஜெஸ்மியா 597 மதிப்பெண்கள் பெற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் சி... மேலும் பார்க்க

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. சீா்காழி கோட்டாட்சியா் (பொ) அன்பழகன் தலைமை வகித்தாா். இதில், மாதிரவேளூா், புத்தூா், எருக்கூா், கோபால சமுத்திரம், வடரெங்கம், அத்திய... மேலும் பார்க்க

ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

மயிலாடுதுறை ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 140 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதியிருந்த நிலையில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது. மாணவா் பி. வ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: ஜமாபந்தியில் 415 மனுக்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு எனப்படும் ஜமாபந்தியில் 415 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்த... மேலும் பார்க்க

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரா், சட்டைநாதா், தோணியப்பா் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனா். இங்கு திருஞ... மேலும் பார்க்க