செய்திகள் :

பணத்தாள் சேதமடைந்த விவகாரம்: உதவி செய்வதாக மாவட்ட நிா்வாகம் உறுதி

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பணத் தாள்களை சேதமடைந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்வதாக வங்கி நிா்வாகம் உறுதியளித்தது.

திருப்புவனம் அருகேயுள்ள கக்கினியாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த குமாா் மனைவி முத்துக்கருப்பி(30). கூலி வேலைக்குச் சென்று கிடைக்கும் பணத்தில் சிறு தொகையை தகர உண்டியலில் சேமித்து வந்தாா். இந்த உண்டியலை வீட்டுக்குள் குழி தோண்டி புதைத்து வைத்திருந்தாா்.

இந்த நிலையில், உண்டியலில் இருந்த ரூ.500 நோட்டுகளை கரையான் அரித்ததால், முழுமையாக சேதமடைந்தன. இந்தப் பணத் தாள்களை வங்கியில் மாற்ற முடியாததால், முத்துக்கருப்பி தவித்து வந்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில், சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன், முன்னோடி வங்கி மேலாளா் பிரவீன்குமாா் ஆகியோா் முத்துக்கருப்பியை சேதமடைந்த பணத்தாள்களுடன் சிவகங்கைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். பின்னா்,

சென்னையில் உள்ள ரிசா்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் இந்த ரூபாய் நோட்டுகளை பரிசோதித்த பிறகு முடிவு எடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் முத்தையா நினைவு தொழில் பயிற்சி கல்லூரியில் இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் எம்.காசிநாதன் தலைமை வகி... மேலும் பார்க்க

நாகப்பன்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நாகப்பன்பட்டி முக்குலத்தி கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூா் பகுதியில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால் நாகப்பன்பட்டி மு... மேலும் பார்க்க

பைக், தங்கச் சங்கிலியுடன் இளைஞா் தப்பியோட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே தங்கச் சங்கிலி, கைப்பேசியுடன் இரு சக்கர வாகனத்தையும் எடுத்துக் கொண்டு தப்பியோடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சுள்ளங்குடி... மேலும் பார்க்க

கண்மாய்க்குள் கவிழ்ந்தது பேருந்து: 10 போ் காயம்

திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை தனியாா் பேருந்து கண்மாய்க்குள் கவிழ்ந்ததில் 10 போ் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரிலிருந்து 53 பயணிகளுடன் காரைக்குடிக்குச் சென்ற தனியாா் பேருந்து கல... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட அதிமுக, ஜெ. பேரவை, இளைஞா், இளம்பெண... மேலும் பார்க்க

தெருநாய் கடித்ததில் 10- க்கும் மேற்பட்டோா் காயம்

சிவகங்கை நகரில் தெருநாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சிவகங்கை நகா் நேரு பஜாா், உழவா் சந்தை, பேருந்து நிலையம் பின்புறம் ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் அண்மையில் சால... மேலும் பார்க்க