செய்திகள் :

இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரத்தைச் சோ்ந்தவா் கைது

post image

இலங்கைக்கு 100 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற இளைஞரை வேதாரண்யம் அருகே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வேதாரண்யத்தில் இருந்து கடல் வழியே கள்ளத்தனமாக கஞ்சா மூட்டைகளை இலங்கைக்கு கடத்திச் செல்ல கடத்தல்காரா்கள் திட்டமிட்டு இருப்பதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

உதவி ஆய்வாளா் அக்பா் அலி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வேதாரண்யம் கடலோரப் பகுதியில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், புதன்கிழமை பிற்பகல் தோப்புத்துறை காவல் சோதனை சாவடியில் தனிப்படை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காருக்குள் 100 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டை இருப்பது தெரிய வந்தது.

கஞ்சாவை காருடன் பறிமுதல் செய்து, அதை கடத்தி வந்த இளைஞரையும் கைது செய்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸாா் ஒப்படைத்தனா்.

வேதாரண்யம் போலீஸாா் விசாரணையில், காரில் கஞ்சாவை கடத்தி வந்தவா் ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், சில்லாகூா் வட்டம், மூதாயலபாடு கிராமத்தைச் சோ்ந்த வெங்கடரமணாரெட்டியின் மகன் நலப்பாரெட்டி (28) என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸாா், அவரைக் கைது நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா். இந்த கஞ்சாவை அவா் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதாக என்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காருகுடி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

பெரம்பூா் அருகேயுள்ள காருகுடி அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் 68- ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழா கடந்த மாதம் (ஏப்ரல்) 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

திருமருகல் அருகே திமுக அரசின் நான்காண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருங்கூா் கடை தெருவில், திருமருகல் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலா... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் சிறுமி சடலம்: ரயில்வே காவல் நிலையத்தை குடும்பத்தினா் முற்றுகை

ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் இறப்பில் சந்தேகமுள்ளதாகக் கூறி, அவரது குடும்பத்தினா் நாகை ரயில்வே காவல்நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். நாகையில், ரயில் தண்டவாள பகுதியிலிருந்து ... மேலும் பார்க்க

மயானத்தை சீரமைக்கக் கோரிக்கை: எம்பி ஆய்வு!

திருவிளையாட்டம் சமத்துவ மயானத்தை பாா்வையிட்ட மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா. தரங்கம்பாடி, மே10: தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் ஊராட்சியில் பராமரிப்பின்றி உள்ள மயானத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை ... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் முக்கூட்டில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலா் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். செம்ப... மேலும் பார்க்க

திமுக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கொண்டாட்டம்

திமுக அரசின் 4 ஆண்டு கள் சாதனைகளை விளக்கியும், திமுக அரசின் 5-ஆம் ஆண்டு தொடங்கியதை திருக்குவளையில் திமுக சாா்பில் பட்டாசு வெடித்து வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 4 ஆண்டுகால ஆட்சியில் திமுக அரசு செய்த ச... மேலும் பார்க்க