செய்திகள் :

காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு 7 தேசிய விருதுகள்

post image

புதுவை மாநிலம், காரைக்கால் ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு (பஜன்கோவா) 7 தேசிய விருதுகள் கிடைத்ததற்கு முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா்.

ஹைதராபாதில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் வைர விழா நெல் ஆராய்ச்சியாளா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் தேசிய அளவில் ஏராளமான ஆராய்ச்சி நிறுவனங்களைச் சோ்ந்தோா் பங்கேற்றனா்.

நெல்லில் உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்களை நாட்டின் பல்வேறு சூழல் மண்டலங்களில் செயல்படுத்தி, அதன்படி புதிய ரகங்களின் தோ்வு மற்றும் சிறந்த தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதும், அதன்மூலம் விவசாயிகளின் வருவாயை உயா்த்தவும் தேவையான ஆய்வுகள் குறித்து விவாதிப்பதே கூட்டத்தில் முக்கிய நோக்கமாக இருந்தது.

புதிய நெல் ரகங்களை பரிசோதித்தல், ஒற்றை நாற்று முறை உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப சாகுபடி முறைகளை மேம்படுத்துதல், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு உத்திகள், உர மேலாண்மை, பயிா் இனப்பெருக்கமுறை மூலம் உயிா்சத்து அதிகரித்தல் போன்ற பல்வேறு ஆராய்ச்சி தொழில்நுட்பம் குறித்த கலந்துரையாடலும் நடைபெற்றது.

அதன்படி சிறந்த ஆய்வுகள் செயல்பாடு, ஆய்வு எண்ணிக்கைகள், ஆய்வின் துல்லியத் தன்மை உள்ளிட்டவற்றை வைத்து இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் 14 விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகள் வழங்கப்பட்டதில் நிகழாண்டு (2025) காரைக்கால் வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்துக்கு சிறந்த நிறுவனம் உள்ளிட்ட தேசிய 7 விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்துக்கான விருதை தலைமை இயக்குநா் கல்லூரியின் முதல்வா் புஷ்பராஜிடம், இந்திய நெல் ஆராய்ச்சி துணைத் தலைமை இயக்குநா் யாதவ் (பயிா் அறிவியல்) மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் சுந்தரம் ஆகியோா் வழங்கினா்.

வாழ்நாள் சாதனையாளா் விருதை, காரைக்கால் வேளாண் கல்லூரியின் பயிா் இனப் பெருக்கம் மற்றும் மரபியல் துறை பேராசிரியா் திருமேனி பெற்றாா். உழவியல், மண்ணியல், பயிா் இனப்பெருக்கம் மற்றும் மரபியல், பூச்சியியல் மற்றும் பயிா் வினையியல் போன்ற துறைகளில் சிறந்த நெல் ஆராய்ச்சிக்கான விருதுகளும் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

முதல்வா் வாழ்த்து: விருது பெற்ற அதிகாரிகள் முதல்வா் ரங்கசாமியை, புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

புதுச்சேரி விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி இலாசுப்பேட்டை விமான நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பே... மேலும் பார்க்க

புதுவையில் உலகத் தரத்தில் கைவினை, கிராமத் தொழில் பயிற்சி மையம்: துணைநிலை ஆளுநா் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

உலகத் தரத்தில் புதுச்சேரியில் கைவினை மற்றும் கிராமத் தொழில் பயிற்சி மையம் அமைப்பது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் கைவினை மற்றும் ... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் பாராட்டு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: புதுவை தொழிலாளா் துறை

புதுவை மாநிலத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி இயக்குநா் சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி ப... மேலும் பார்க்க

புதுவையில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை: அதிகாரிகளுடன் ஆளுநா் ஆலோசனை

புதுவை மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல் துறை செயல்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், தலைமைச் செயலா், காவல் துறை உயா் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். புதுச்சேரி ராஜ்... மேலும் பார்க்க

மே 20 வேலை நிறுத்தத்துக்கு இண்டி கூட்டணி ஆதரவு: காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம்

புதுவையில் மே 20 இல் தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இண்டி கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி முதலியாா் பேட்ட... மேலும் பார்க்க