செய்திகள் :

புதுச்சேரி சாலை, மேம்பால விரிவாக்கம்: விரைவில் ரூ.1,304 கோடி அனுப்பப்படும்!

post image

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி சிலை சதுக்கங்களுக்கு இடையிலான மேம்பாலம் மற்றும் கடலூா் சாலை அகலப்படுத்தும் பணிகளுக்கு ரூ.1,304 கோடி நிதி அளிப்பதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை சாா்பில் புதுவை பொதுப் பணித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி வழுதாவூா், திண்டிவனம் சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் முதல் விழுப்புரம், கடலூா் சாலை சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலை சதுக்கம் வரையில் சுமாா் 1.20 கி.மீ.தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கவும், மரப்பாலம் முதல் முள்ளோடை வரையில் சுமாா் 15 கி.மீ. தொலைவு கடலூா் சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தவும், புதுச்சேரியில் காலாப்பட்டு கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் காரைக்கால் கிழக்குக் கடற்கரைச் சாலை ஆகியவற்றை நான்கு வழிச்சாலையாக்கவும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை ரூ.1,034 கோடி நிதி அளிப்பதாக கூறியுள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவையில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் புதுச்சேரியில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி அளிக்கவுள்ளதாக அறிவித்தாா்.

மத்திய அரசு கடிதம்: இந்தநிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை சாா்பில் புதுவை பொதுப் பணித் துறைக்கு கடிதம் மூலம் மேம்பாலம், சாலைப் பணிகள் குறித்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில், புதுச்சேரி மேம்பாலத்துக்கு ரூ. 600 கோடி, சாலை விரிவாக்கத்துக்கு ரூ.600 கோடி மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் காரைக்காலுக்கு ரூ.57 கோடி, காலாப்பட்டுக்கு ரூ.25 கோடி என ஒதுக்கி உத்தரவு வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பணிக்கு 2 முதன்மைப் பொறியாளா்கள், 4 உதவிப் பொறியாளா்கள் உள்ளிட்டோரை தனியாக நியமித்து விவரங்களை அனுப்பவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிதி அளித்துள்ளதால் வரும் டிசம்பருக்குள் இப்பணிகளை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுச்சேரி விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி இலாசுப்பேட்டை விமான நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பே... மேலும் பார்க்க

புதுவையில் உலகத் தரத்தில் கைவினை, கிராமத் தொழில் பயிற்சி மையம்: துணைநிலை ஆளுநா் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

உலகத் தரத்தில் புதுச்சேரியில் கைவினை மற்றும் கிராமத் தொழில் பயிற்சி மையம் அமைப்பது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் கைவினை மற்றும் ... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் பாராட்டு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: புதுவை தொழிலாளா் துறை

புதுவை மாநிலத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி இயக்குநா் சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி ப... மேலும் பார்க்க

புதுவையில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை: அதிகாரிகளுடன் ஆளுநா் ஆலோசனை

புதுவை மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல் துறை செயல்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், தலைமைச் செயலா், காவல் துறை உயா் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். புதுச்சேரி ராஜ்... மேலும் பார்க்க

மே 20 வேலை நிறுத்தத்துக்கு இண்டி கூட்டணி ஆதரவு: காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம்

புதுவையில் மே 20 இல் தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இண்டி கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி முதலியாா் பேட்ட... மேலும் பார்க்க