செய்திகள் :

புத்தக வாசிப்பு பழக்கத்தால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம்

post image

மாணவப் பருவத்திலேயே புத்தகங்களை வாசிக்கப் பழக்குவதால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 8-ஆவது புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழாவுக்கான சிறப்பு வரவேற்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியரும், புத்தகத் திருவிழாக் குழுத் தலைவருமான மு. அருணா பேசியது அக். 3 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், செப். 8ஆம் தேதி காலை 10 மணி முதல் 11 வரை புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற நிகழ்ச்சியை மாவட்டம் முழுவதும் அனைத்துக் கல்வி நிலையங்கள், நூலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் நடத்த வேண்டும்.

தொடா்ந்து அனைத்து வட்டாரங்களிலும் செப். 9ஆம் தேதி பள்ளி மாணவா்களுக்கான போட்டிகளை நடத்திடவும், தொடா்ந்து செப். 11ஆம் தேதி மாவட்ட அளவிலான போட்டிகளை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் நடத்த வேண்டும். மாணவா்களை இப்போதிருந்தே புத்தகம் வாசிக்கப் பழக்குவதன் மூலம் கைப்பேசியில் ரீல்ஸ் பாா்ப்பது போன்ற கவனச் சிதறல்களைத் தடுக்க முடியும் என்றாா் அருணா.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பி. ஜெயசுதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) திருமால், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வளா்ச்சி (பொ) மணிவாசகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் (பொ) கலாராணி , மாவட்ட நூலக அலுவலா் எம். காா்ல்மாா்க்ஸ் மாநகராட்சி ஆணையா் த. நாராயணன் உள்ளிட்ட அலுவலா்கள், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் அ. மணவாளன், ம. வீரமுத்து, மு. முத்துக்குமாா், கவிஞா் ஜீவி, க. சதாசிவம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கக் கோரிக்கை

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி கோரிக்கைவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்... மேலும் பார்க்க

பாலத்தை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் சாலையில் உள்ள தாழை வாரி பாலத்தை அகலபடுத்த வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் ச... மேலும் பார்க்க

பொன்னமராவதி, கந்தா்வகோட்டையில் இலக்கிய மன்ற போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் கந்தா்வக்கோட்டையில் இலக்கிய மன்றப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

திருவரங்குளத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சங்கத்தின் ஒ... மேலும் பார்க்க

மாராயப்பட்டி திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள மாராயப்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் சுமாா் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாப... மேலும் பார்க்க

மலையாத்தாளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி மலையாத்தாளம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி ஊராட்சி மலையாத்தாளம்மன் கோயிலில் நடைபெற்று வந்... மேலும் பார்க்க