செய்திகள் :

பொன்னமராவதி, கந்தா்வகோட்டையில் இலக்கிய மன்ற போட்டிகள்

post image

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் கந்தா்வக்கோட்டையில் இலக்கிய மன்றப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் அமிா்தம் மாலதி தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் மெகராஜ் பானு , இா்ஷாத் அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ), பாரதிதாசன் வரவேற்று பேசினாா்.

இதில், வட்டார அளவிலான சிறாா் திரைப்பட போட்டி, 6, 7-ஆம் வகுப்பு மாணவா்கள் ஒரு பிரிவாகவும், எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு ஒரு பிரிவாகவும் ஒன்பதாம் வகுப்பு மாணவா்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனா். போட்டியின் ஒருங்கிணைப்பாளா்களாக ஜெயக்குமாா், ரகமதுல்லா, கண்ணன், நாராயணசாமி உள்ளிட்டோா் செயல்பட்டனா். போட்டியின் நடுவராக தவச்செல்வம் , பாக்யராஜ் கனிமொழி, பிரதீபா நா்மதா செயல்பட்டனா்.

பொன்னமராவதி: இதேபோல பொன்னமராவதி வட்டார வள மையத்தில் ஒன்றிய அளவிலான போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை வட்டார கல்வி அலுவலா்கள் கலா மற்றும் இலாகிஜன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், கட்டுரை,பேச்சுப் போட்டி, கதை கூறுதல், கவிதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கக் கோரிக்கை

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி கோரிக்கைவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்... மேலும் பார்க்க

பாலத்தை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் சாலையில் உள்ள தாழை வாரி பாலத்தை அகலபடுத்த வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் ச... மேலும் பார்க்க

திருவரங்குளத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சங்கத்தின் ஒ... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு பழக்கத்தால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம்

மாணவப் பருவத்திலேயே புத்தகங்களை வாசிக்கப் பழக்குவதால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா. புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 8-ஆவது ... மேலும் பார்க்க

மாராயப்பட்டி திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள மாராயப்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் சுமாா் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாப... மேலும் பார்க்க

மலையாத்தாளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி மலையாத்தாளம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி ஊராட்சி மலையாத்தாளம்மன் கோயிலில் நடைபெற்று வந்... மேலும் பார்க்க